மிஸ். தமிழ் பாடல்கள்
கற்றவித்தை ஏதுமில்லை, காட்டு மனிதன்,ஐயே —பாரதி
         

பாடல்கள் | டைரிக் குறிப்புகள் | Android Apps

 


தப்புக்கழகு
(பன்னிரண்டடியான் வந்த பஃறொடை வெண்பா)

புத்தம் புதிதாய்ப் புலம்பெயர்ந்த பேட்டையில்
தப்பட்டை இல்லார் தவறியுங் கூடஇல்லை.
பண்டிகையோ ஒன்றுவிட்ட பங்காளி நீத்தாரோ
மண்ணெண்ணெய் ஊற்றியதில் மக்காத குப்பையிட்டுத்
தப்பட்டை வாட்டுவர்; தட்டித்தட் டிப்பார்ப்பர்.
தப்பத் தெரியாது; தட்—டித்-தட் டிப்–பார்ப்பர்.
பண்டிகை கொஞ்சமல்ல, பங்காளி கொஞ்சமல்ல,
கண்கள் இராத்தூக்கம் கண்டது தான்கொஞ்சம்.
அண்டை அயலே! அடியேனின் யோசனைகேள்:
புண்ணியமாய்ப் போகும், புதுமையாய்க் காட்சிதரும்
சாணி மெழுகியுடன் சாத்திரஞ் சொல்லியதை
 ஆணியில் மாட்டும் — அழகு!

       

பாடலுக்கான டைரிக் குறிப்பு