நிரோட்ட எழுத்துகளின் எண்ணிக்கை வரிசையில்
திருக்குறள்
(மொத்த எழுத்துகளின் எண்ணிக்கையைக் கணக்கில் கொள்ளாமல்)
மேல்விவரம்; மென்பிரதி மூலம்

 

0/28      எய்தற் கரிய தியைந்தக்கா லந்நிலையே
செய்தற் கரிய செயல். (489)
1/22      யாதனின் யாதனி னீங்கியா னோத
லதனி னதனி னிலன்  (341)
2/30      செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
2/27      தலையி னிழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையி னிழிந்தக் கடை.  (964)
3/23      சாதலி னின்னாத தில்லை யினிததூஉ
மீத லியையாக் கடை. (230)
3/29      இறந்தா ரிறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை. (310)
3/32      தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில். (446)
3/23      ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை
போகா றகலாக் கடை. (478)
3/28      செயற்கை யறிந்தக் கடைத்து முலகத்
தியற்கை யறிந்து செயல். (637)
3/32      கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி யகத்தார்
நிலைக்கெளிதா நீர தரண். (745)
3/25      மாலை நோய் செய்தன் மணந்தா ரகலாத
காலை யறிந்த திலேன். (1226)
4/31      அறவாழி யந்தணன் றாள்சேர்ந்தார்க் கல்லாற்
பிறவாழி நீந்த லரிது. (8)
4/28      அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை
நின்றாரிற் பேதையா ரில் . (142)
4/32      தன்னைத்தான் காக்கிற் சினங்காக்க காவாக்காற்
றன்னையே கொல்லுஞ் சினம். (305)
4/26      காலாழ் களரி னரியடுங் கண்ணஞ்சா
வேலாண் முகத்த களிறு . (500)
4/30      இனத்தாற்றி யெண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறிற் சிறுகுந் திரு. (568)
4/34      அறனறிந் தான்றமைந்த சொல்லானெஞ் ஞான்றுந்
திறனறிந்தான் றேர்ச்சித் துணை. (635)
4/30      காணாதாற் காட்டுவான் றான்காணான் காணாதான்
கண்டானாந் தான்கண்ட வாறு. (849)
4/34      களித்தானைக் காரணங் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைக் தீத்துரீஇ யற்று.  (929)
4/27      பிறர்நாணத் தக்கது தானாணா னாயி
னறநாணத் தக்க துடைத்து (1018)
4/25      இன்மையி னின்னாத தியாதெனி னின்மையி
னின்மையே யின்னா தது.  (1041)
4/28      நனவென வொன்றில்லை யாயிற் கனவினாற்
காதலர் நீங்கலர் மன். (1216)
4/26      காணுங்காற் காணேன் றவறாய காணாக்காற்
காணேன் றவறல் லவை. (1286)
4/27      தஞ்சந் தமரல்ல ரேதிலார் தாமுடைய
நெஞ்சந் தமரல் வழி. (1300)
5/26      கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவ
னற்றா டொழாஅ ரெனின். (2)
5/24      மனத்துக்கண் மாசில னாத லனைத்தற
னாகுல நீர பிற. (34)
5/28      காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினு
ஞாலத்தின் மாணப் பெரிது. (102)
5/27      கெடுவல்யா னென்ப தறிகதன் னெஞ்ச
நடுவொரீஇ யல்ல செயின் . (116)
5/28      அறனழீஇ யல்லவை செய்தலிற் றீதே
புறனழீஇப் பொய்த்து நகை. (182)
5/30      பயனில் பல்லார்முற் சொல்ல னயனில
நட்டார்கட் செய்தலிற் றீது (192)
5/25      தீயவை செய்தார் கெடுத னிழறன்னை
வீயா தடியுறைந் தற்று. (208)
5/26      நல்லாற்றா னாடி யருளாள்க பல்லாற்றாற்
றேரினு மஃதே துணை. (242)
5/29      அளவின்க ணின்றொழுக லாற்றார் களவின்கட்
கன்றிய காத லவர். (286)
5/27      இன்னா செய்தாரை யொறுத்த லவர்நாண
நன்னயஞ் செய்து விடல். (314)
5/29      ஐயத்தி னீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வான நணிய துடைத்து. (353)
5/26      கற்க கசடறக் கற்பவை கற்றபி
னிற்க வதற்குத் தக  (391)
5/30      உடையார்மு னில்லார்போ லேக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர். (395)
5/26      கல்லாதா னொட்பங் கழியநன் றாயினுங்
கொள்ளா ரறிவுடை யார். (404)
5/26      நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராத லரிது. (419)
5/24      அறிவுடையா ராவ தறிவா ரறிவிலா
ரஃதறி கல்லா தவர். (427)
5/24      காதல காத லறியாமை யுய்க்கிற்பி
னேதில வேதிலார் நூல். (440)
5/28      முதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை. (449)
5/31      ஒல்வ தறிவ தறிந்ததன் கட்டங்கிச்
செல்வார்க்குச் செல்லாத தில். (472)
5/26      ஞாலங் கருதினுங் கைகூடுங் காலங்
கருதி யிடத்தாற் செயின் . (484)
5/28      அஞ்சாமை யல்லாற் றுணைவேண்டா வெஞ்சாமை
யெண்ணி யிடத்தாற் செயின் . (497)
5/28      அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கா
லின்மை யரிதே வெளிறு . (503)
5/35      அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான்
சிறந்தானென் றேவற்பாற் றன்று. (515)
5/26      செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ
டெய்த வுணர்ந்து செயல் . (516)
5/28      வினையான் வினையாக்கிக் கோட னனைகவுள்
யானையால் யானையாத் தற்று. (678)
5/29      நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
யொட்டாரை யொட்டிக் கொளல். (679)
5/32      கற்றுக்கண் ணஞ்சான் செலச்சொல்லிக் காலத்தாற்
றக்க தறிவதாந் தூது. (686)
5/27      கடனறிந்து காலங் கருதி யிடனறிந்
தெண்ணி யுரைப்பான் றலை. (687)
5/26      பகையகத்துக் சாவா ரெளிய ரரிய
ரவையகத் தஞ்சா தவர் (723)
5/24      நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு (739)
5/30      எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
யில்லார்க ணில்ல தரண். (750)
5/28      நிலைமக்கள் சால வுடைத்தெனினுந் தானை
தலைமக்க ளில்வழி யில். (770)
5/27      சீரிடங் காணி னெறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு.  (821)
5/31      கூற்றத்தைக் கையால் விளித்தற்றா வாற்றுவார்க்
காற்றாதா ரின்னா செயல். (894)
5/32      இறந்தமைந்த சார்புடைய ராயினு முய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின். (900)
5/28      வாழ்த லுயிர்க்கன்ன ளாயிழை சாத
லதற்கன்ன ணீங்கு மிடத்து. (1124)
5/27      மன்னுயி ரெல்லாந் துயிற்றி யளித்திரா
வென்னல்ல தில்லை துணை. (1168)
5/27      நனவினா னல்கா தவரைக் கனவினாற்
காண்டலி னுண்டென் னுயிர். (1213)
5/26      நனவினா னல்காரை நோவர் கனவினாற்
காதலர்க் காணா தவர். (1219)
5/27      உள்ளத்தார் காத லவராக வுள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு. (1249)
5/34      இளித்தக்க வின்னா செயினுங் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்ளநின் மார்பு. (1288)
5/29      தனியே யிருந்து நினைத்தக்கா லென்னைத்
தினிய விருந்ததென் னெஞ்சு. (1296)
5/30      நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகை
பூவன்ன கண்ணா ரகத்து. (1305)
6/31      நெடுங்கடலுந் தன்னீர்மை குன்றுந் தடிந்தெழிலி
தானல்கா தாகி விடின். (17)
6/30      மனைமாட்சி யில்லாள்க ணில்லாயின் வாழ்க்கை
யெனைமாட்சித் தாயினு மில். (52)
6/27      இல்லதெ னில்லவண் மாண்பானா லுள்ளதெ
னில்லவள் மாணாக் கடை. (53)
6/28      அகனமர்ந் தீதலி னன்றே முகனமர்ந்
தின்சொல னாகப் பெறின். (92)
6/26      நன்றே தரினு நடுவிகந்தா மாக்கத்தை
யன்றே யொழிய விடல். (113)
6/29      திறனல்ல தற்பிறர் செய்யினு நோநொந்
தறனல்ல செய்யாமை நன்று. (157)
6/29      அறனறிந்து வெஃகா வறிவுடையார்ச் சேருந்
திறனறிந் தாங்கே திரு. (179)
6/29      தன்னைத்தான் காதல னாயி னெனைத்தொன்றுந்
துன்னற்க தீவினைப் பால். (209)
6/26      அருங்கேட னென்ப தறிக மருங்கோடித்
தீவினை செய்யா னெனின். (210)
6/27      நயனுடையானல்கூர்ந்தா னாதல் செயுநீர
செய்யா தமைகலா வாறு. (219)
6/33      அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை யிருள்சேர்ந்த
வின்னா வுலகம் புகல். (243)
6/26      இலர்பல ராகிய காரண நோற்பார்
சிலர்பலர் நோலா தவர். (270)
6/34      அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல் நிற்குங்
களவறிந்தார் நெஞ்சிற் கரவு. (288)
6/28      அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர். (289)
6/29      செல்லா விடத்துச் சினந்தீது செல்லிடத்து
மில்லதனிற் றீய பிற. (302)
6/29      நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாங் கொலையஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் றலை. (325)
6/27      அற்றவ ரென்பா ரவாவற்றார் மற்றையா
ரற்றாக வற்ற திலர். (365)
6/29      நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவு
நல்லவாஞ் செல்வஞ் செயற்கு. (375)
6/29      அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.  (401)
6/30      உளரென்னு மாத்திரைய ரல்லாற் பயவாக்
களரனையர் கல்லா தவர். (406)
6/28      நல்லார்கட் பட்ட வறுமையி னின்னாதே
கல்லார்கட் பட்ட திரு. (408)
6/25      அறிவுடையா ரெல்லா முடையா ரறிவிலா
ரென்னுடைய ரேனு மிலர். (430)
6/30      மனந்தூயார்க் கெச்சநன் றாகு மினந்தூயார்க்
கில்லைநன் றாகா வினை. (456)
6/27      ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை
யூக்கா ரறிவுடை யார். (463)
6/29      செய்தக்க வல்ல செயக்கெடுஞ் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும் . (466)
6/26      செறுநரைக் காணிற் சுமக்க விறுவரை
காணிற் கிழக்காந் தலை . (488)
6/29      எண்ணியா ரெண்ண மிழப்ப ரிடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின் . (494)
6/29      இதனை யிதனா லிவன்முடிக்கு மென்றாய்ந்
ததனை யவன்கண் விடல். (517)
6/27      வினைக்குரிமை நாடிய பின்றை யவனை
யதற்குரிய னாகச் செயல் . (518)
6/31      அச்ச முடையார்க் கரணில்லை யாங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு. (534)
6/31      அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை. (555)
6/29      கடுஞ்சொல்லன் கண்ணில னாயி னெடுஞ்செல்வ
நீடின்றி யாங்கே கெடும். (566)
6/32      பண்ணென்னாம் பாடற் கியைபின்றேற் கண்ணென்னாங்
கண்ணோட்ட மில்லாத கண். (573)
6/29      வெள்ளத் தனைய மலர்நீட்ட மாந்தர்த
முள்ளத் தனைய துயர்வு. (595)
6/28      இணரூழ்த்து நாறா மலரனையர் கற்ற
துணர விரித்துரையா தார். (650)
6/31      எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேன்
மற்றன்ன செய்யாமை நன்று. (655)
6/28      பழிமலைந் தெய்திய வாக்கத்திற் சான்றோர்
கழிநல் குரவே தலை. (657)
6/28      எண்ணிய வெண்ணியாங் கெய்துப வெண்ணியார்
திண்ணிய ராகப் பெறின். (666)
6/29      கலங்காது கண்ட வினைக்கட் டுளங்காது
தூக்கங் கடிந்து செயல். (668)
6/33      கற்றறிந்தார் கல்வி விளங்குங் கசடறச்
சொற்றெரிதல் வல்லா ரகத்து. (717)
6/32      கற்றார்முற் கற்ற செலச்சொல்லித் தாங்கற்ற
மிக்காருண் மிக்க கொளல். (724)
6/28      கல்லா தவரிற் கடையென்ப கற்றறிந்து
நல்லா ரவையஞ்சு வார். (729)
6/29      கேடறியாக் கெட்ட விடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டிற் றலை. (736)
6/32      கேளிழுக்கங் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்க நட்டார் செயின். (808)
6/29      செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
யெய்தலி ணெய்தாமை நன்று. (815)
6/29      பலநல்ல கற்றக் கடைத்து மனநல்ல
ராகுதன் மாணார்க் கரிது. (823)
6/25      இகல்காணா னாக்கம் வருங்கா லதனை
மிகல் கேடு தரற்கு. (859)
6/27      இகலானா மின்னாத வெல்லா நகலானா
நன்னய மென்னுஞ் செருக்கு. (860)
6/30      இல்லாளை யஞ்சுவா னஞ்சுமற் றெஞ்ஞான்று
நல்லார்க்கு நல்ல செயல். (905)
6/26      கவறுங் கழகமுங் கையுந் தருக்கி
யிவறியா ரில்லாகி யார். (935)
6/29      இன்னாசெய் தார்க்கு மினியவே செய்யாக்கா
லென்ன பயத்ததோ சால்பு. (987)
6/27      தெண்ணீ ரடுபுற்கை யாயினும் தாடந்த
துண்ணலி னூங்கினிய தில். (1065)
6/27      நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத் தவல மிலர். (1072)
6/32      அறைபறை யன்னர் கயவர்தாங் கேட்ட
மறைபிறர்க் குய்த்துரைக்க லான். (1076)
6/27      நோக்கினா ணோக்கி யிறைஞ்சினா ளஃதவள்
யாப்பினு ளட்டிய நீர். (1093)
6/29      மலரன்ன கண்ணாண் முகமொத்தி யாயிற்
பலர்காணத் தோன்றன் மதி . (1119)
6/26      மலரன்ன கண்ணா ளருமை யறியா
தலரெமக் கீந்ததிவ் வூர். (1142)
6/26      வாராக்காற் றுஞ்சா வரிற்றுஞ்சா வாயிடை
யாரஞ ருற்றன கண். (1179)
6/30      நாங்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாங்காதல் கொள்ளாக் கடை,  (1195)
6/25      விடா அது சென்றாரைக் கண்ணினாற் காணப்
படாஅதி வாழி மதி. (1210)
6/26      கனவினா னுண்டாகுங் காம நனவினா
னல்காரை நாடித் தரற்கு. (1214)
6/25      செற்றா ரெனக்கை விடலுண்டோ நெஞ்சேயா
முற்றா லுறாஅ தவர் . (1245)
6/31      நிணந்தீயி லிட்டன்ன நெஞ்சினார்க் குண்டோ
புணர்ந்தூடி நிற்பே மெனல். (1260)
6/29      உரனசைஇ யுள்ளந் துணையாகச் சென்றார்
வரனசைஇ யின்னு முளேன். (1263)
6/30      உறாஅ தவர்க்கண்ட கண்ணு மவரைச்
செறாஅரெனச் சேறியென் னெஞ்சு. (1292)
6/31      கெட்டார்க்கு நட்டாரில் லென்பதோ நெஞ்சேநீ
பெட்டாங் கவர்பின் செலல். (1293)
6/34      உள்ளினே னென்றேன்மற் றென்மறந் தீ ரென்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள். (1316)
7/27      மலர் மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். (3)
7/35      தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்ற லரிது. (7)
7/28      கோளில் பொறியிற் குணமிலவே யெண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. (9)
7/29      அறத்தினூஉங் காக்கமு மில்லை யதனை
மறத்தலி னூங்கில்லை கேடு. (32)
7/34      மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. (51)
7/28      குழலினி தியாழினி தென்பதம் மக்கண்
மழலைச் சொற் கேளா தவர். (66)
7/24      என்பி லதனை வெயில்போலக் காயுமே
யன்பி லதனை யறம். (77)
7/28      முகத்தா னமர்ந்தினிது நோக்கி யகத்தானா
மின்சொ லினதே யறம். (93)
7/27      கெடுவாக வையா துலக நடுவாக
நன்றிக்கட் டங்கியான் றாழ்வு . (117)
7/28      காக்க பொருளா வடக்கத்தை யாக்க
மதனினூங் கில்லை யுயிர்க்கு. (122)
7/26      நிலையிற் றிரியா தடங்கியான் றோற்ற
மலையினு மாணப் பெரிது. (124)
7/33      அழுக்கற் றகன்றாரு மில்லையஃ தில்லார்
பெருக்கத்திற் றீர்ந்தாரு மில். (170)
7/28      அறிவினு ளெல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்குஞ் செய்யா விடல். (203)
7/32      தீப்பால தான்பிறர்கட் செய்யற்க நோய்ப்பால
தன்னை யடல்வேண்டா தான். (206)
7/25      இரத்தலி னின்னாது மன்ற நிரப்பிய
தாமே தமிய ருணல். (229)
7/29      அல்ல லருளாள்வார்க் கில்லை வளிவழங்கு
மல்லன்மா ஞாலங் கரி. (245)
7/32      வலியார்முற் றன்னை நினைக்கதான் றன்னின்
மெலியார்மேற் செல்லு மிடத்து. (250)
7/31      செயிரிற் றலைப்பிரிந்த காட்சியா ருண்ணா
ருயிரிற் றலைப்பிரிந்த வூன். (258)
7/36      செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் னல்லிடத்துக்
காக்கினென் காவாக்கா லென்.  (301)
7/27      உள்ளிய தெல்லா முடனெய்து முள்ளத்தா
லுள்ளான் வெகுளி யெனின். (309)
7/30      தன்னுயிர்க் கின்னாமை தானறிவா னென்கொலோ
மன்னுயிர்க் கின்னா செயல் (318)
7/26      வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபி
னீண்டியற் பால பல. (342)
7/29      நன்றாங்கா னல்லவாக் காண்பவ ரன்றாங்கா
லல்லற் படுவ தெவன். (379)
7/27      அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மான முடைய தரசு. (384)
7/29      காட்சிக் கெளியன் கடுஞ்சொல்ல னல்லனேன்
மீக்கூறு மன்ன னிலம். (386)
7/33      இன்சொலா லீத்தளிக்க வல்லாற்குத் தன்சொலாற்
றான்கண் டனைத்திவ் வுலகு. (387)
7/29      கல்லா தவரு நனிநல்லர் கற்றார்முற்
சொல்லா திருக்கப் பெறின். (403)
7/28      செயற்பால செய்யா திவறியான் செல்வ
முயற்பால தன்றிக் கெடும். (437)
7/26      இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே
கெடுக்குந் தகைமை யவர் (447)
7/33      நிலத்தியல்பா னீர்திர்ந் தற்றாகு மாந்தர்க்.
கினத்தியல்ப தாகு மறிவு. (452)
7/31      உடைத்தம் வலியறியா ரூக்கத்தி னூக்கி
யிடைக்கண் முரிந்தார் பலர். (473)
7/30      அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று. (523)
7/26      காக்கை கரவா கரைந்துண்ணு மாக்கமு
மன்னநீ ரார்க்கே யுள. (527)
7/28      இறந்த வெகுளியிற் றீதே சிறந்த
வுவகை மகிழ்ச்சியிற் சோர்வு .  (531)
7/28      அரியவென் றாகாத வில்லைபொச் சாவாக்
கருவியாற் போற்றிச் செயின். (537)
7/28      மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைந்துகண் ணோடா தவர். (576)
7/26      அறிகொன் றறியா னெனினு முறுதி
யுழையிருந்தான் கூறல் கடன். (638)
7/29      இடுக்கட் படினு மிளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர். (654)
7/30      வினைபகை யென்றிரண்டி னெச்ச நினையுங்காற்
றீயெச்சம் போலத் தெறும். (674)
7/33      கொள்ளப்பட்டே மென்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர். (699)
7/29      நுண்ணிய மென்பா ரளக்குங்கோல் காணுங்காற்
கண்ணல்ல தில்லை பிற. (710)
7/34      அங்கணத்து ளுக்க வமிழ்தற்றாற் றங்கணத்த
ரல்லார்முற் கோட்டி கொளல். (720)
7/32      குன்றேறி யானைப்போர் கண்டற்றாற் றன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை. (758)
7/30      தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்குந் தன்மை யறிந்து. (767)
7/25      கான முயலெய்த வம்பினில் யானை
பிழைத்தவே லேந்த லினிது. (772)
7/26      உறினுயி ரஞ்சா மறவ ரிறைவன்
செறினுஞ்சீர் குன்ற லிலர். (778)
7/34      புரந்தார்கண் ணீர்மல்கச் சாகிற்பிற் சாக்கா
டிரந்துகோட் டக்க துடைத்து. (780)
7/30      நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு.  (791)
7/30      ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாந் துயரந் தரும். (792)
7/32      அழச்சொல்லி யல்ல திடித்து வழக்கறிய
வல்லார்நட் பாய்ந்து கொளல். (795)
7/28      பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
செய்தாங் கமையாக் கடை. (803)
7/30      விழைதகையான் வேண்டி யிருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின். (804)
7/29      அமரகத் தாற்றறுக்குங் கல்லாமா வன்னார்
தமரிற் றனிமை தலை. (814)
7/27      முகத்தி னினிய நகாஅ வகத்தின்னா
வஞ்சரை யஞ்சப் படும். (824)
7/26      பேதைமையு ளெல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கட் செயல். (832)
7/28      இகலிற் கெதிர்சாய்த லாக்க மதனை
மிகலூக்கி னூக்குமாங் கேடு. (858)
7/25      அஞ்சு மறியா னமைவில னீகலான்
றஞ்ச மெளியன் பகைக்கு. (863)
7/25      தேறினுந் தேறா விடினு மழிவின்கட்
டேறான் பகாஅன் விடல். (876)
7/35      எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க் கெஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை யில். (910)
7/28      உண்ணற்க கள்ளை யுணிலுண்க சான்றோரா
னெண்ணப் படவேண்டா தார். (922)
7/35      நிலத்திற் கிடந்தமை கால்காட்டுங் காட்டுங்
குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல். (959)
7/31      புகழின்றாற் புத்தேணாட் டுய்யாதா லென்மற்
றிகழ்வார்பின் சென்று நிலை. (966)
7/30      சால்பிற்குக் கட்டளை யாதெனிற் றோல்வி
துலையல்லார் கண்ணுங் கொளல். (986)
7/28      நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றா ராதல் கடை. (998)
7/28      பலகுடை நீழலுந் தங்குடைக்கீழ்க் காண்ப
ரலகுடை நீழ லவர் (1034)
7/31      இடமெல்லாங் கொள்ளாத் தகைத்தே யிடமில்லாக்
காலு மிரவொல்லாச் சால்பு. (1064)
7/26      அச்சமே கீழ்கள தாசார மெச்ச
மவாவுண்டே லுண்டாஞ் சிறிது. (1075)
7/34      பண்டறியேன் கூற்றென் பதனை யினியறிந்தேன்
பெண்டகையாற் பேரமர்க் கட்டு. (1083)
7/28      கடாஅக் களிற்றின்மேற் கட்படா மாதர்
படாஅ முலைமேற் றுகில். (1087)
7/31      உண்டார்க ணல்ல தடுநறாக் காமம்போற்
கண்டார் மகிழ்செய்த லின்று. (1090)
7/27      அறிதோ றறியாமை கண்டற்றாற் காமஞ்
செறிதோறுஞ் சேயிழை மாட்டு. (1110)
7/23      பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயி றூறிய நீர் .  (1121)
7/28      அலரெழ வாருயிர் நிற்கு மதனைப்
பலரறியார் பாக்கியத் தால்.  (1141)
7/27      இன்னா தினனில்லூர் வாழ்த லதனினு
மின்னா தினியார்ப் பிரிவு. (1158)
7/29      கண்டாங் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாங்காட்ட யாங்கண் டது. (1171)
7/29      படலாற்றா பைத லுழக்குங் கடலாற்றாக்
காமநோய் செய்தவென் கண். (1175)
7/27      மறைபெற லூரார்க் கரிதன்றா லெம்போ
லறைபறை கண்ணா ரகத்து. (1180)
7/27      பசந்தா ளிவளென்ப தல்லா லிவளைத்
துறந்தா ரவரென்பா ரில். (1188)
7/31      பசக்கமற் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலைய ராவ ரெனின். (1189)
7/31      தந்நெஞ்சத் தெம்மைக் கடிகொண்டார் நாணார்கொ
லெந்நெஞ்சத் தோவா வரல். (1205)
7/28      நனவினா னந்நீத்தா ரென்பர் கனவினாற்
காணார்கொ லிவ்வூ ரவர். (1220)
7/24      காதல ரில்வழி மாலை கொலைக்களத்
தேதிலர் போல வரும். (1224)
7/30      காலைக்குச்செய்தநன் றென்கொ லெவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை (1225)
7/28      சிறுமை நமக்கொழியச் சேட்சென்றா ருள்ளி
நறுமலர் நாணின கண்.  (1231)
7/32      இருந்துள்ளி யென்பரித னெஞ்சே பரிந்துள்ளல்
பைதனோய் செய்தார்க ணில் . (1243)
7/39      கலந்துணர்த்துங் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்தியென் னெஞ்சு. (1246)
7/28      காமக் கணிச்சி யுடைக்கு நிறையென்னு
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.  (1251)
7/29      செற்றவர் பின்சேறல் வேண்டி யளித்தரோ
வெற்றென்னை யுற்ற துயர் . (1256)
7/26      நாணென வொன்றோ வறியலங் காமத்தாற்
பேணியார் பெட்ப செயின். (1257)
7/31      பெறினென்னாம் பெற்றக்கா லென்னா முறினென்னா
முள்ள முடைந்துக்கக் கால். (1270)
7/28      அவல்நெஞ் சவர்க்காதல் கண்டு மெவனெஞ்சே
நீயெமக் காகா தது.  (1291)
7/28      எள்ளி னிளிவாமென் றெண்ணி யவர்திற
முள்ளு முயிர்க்காத னெஞ்சு. (1298)
7/28      துன்பத்திற் கியாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி . (1299)
7/27      நோத லெவன்மற்று நொந்தாரென் றஃதறியுங்
காதல ரில்லா வழி. (1308)
7/29      புலத்தலிற் பத்தேணா டுண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னா ரகத்து. (1323)
8/26      பிறவிப் பெருங்கட னீந்துவர் நீந்தா
ரிறைவ னடிசேரா தார். (10)
8/32      ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமா
னிந்திரனே சாலுங் கரி. (25)
8/30      அன்றறிவா மென்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்காற் பொன்றாத் துணை. (36)
8/25      அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தா னிடை (37)
8/29      இல்வாழ்வா னென்பா னியல்புடைய மூவர்க்கு
நல்லாற்றி னின்றி துணை. (41)
8/33      தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண். (56)
8/28      தந்தை மகற்காற்று நன்றி யவையத்து
முந்தி யிருப்பச் செயல் (67)
8/31      ஈன்ற பொழுதிற் பெரிதுவக்குந் தன்மகனைச்
சான்றோ னெனக்கேட்ட தாய். (69)
8/31      அன்பிலா ரெல்லாந் தமக்குரிய ரன்புடையா
ரென்பு முரியர் பிறர்க்கு (72)
8/29      அன்போ டியைந்த வழக்கென்ப வாருயிர்க்
கென்போ டியைந்த தொடர்பு. (73)
8/29      அறத்திற்கே யன்புசார் பென்ப வறியார்
மறத்திற்கு மஃதே துணை. (76)
8/35      அன்பகத் தில்லா வுயிர் வாழ்க்கை வன்பாற்கண்
வற்றன் மரந்தளிர்த் தற்று. (78)
8/24      அல்லவை தேய வறம்பெருகு நல்லவை
நாடி யினிய சொலின் . (96)
8/29      பயன்றூக்கார் செய்த வுதவி நயன்றூக்கி
னன்மை கடலிற் பெரிது. (103)
8/27      தக்கார் தகவில ரென்ப தவரவ
ரெச்சத்தாற் காண்ப படும். (114)
8/27      உலகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றுங்
கல்லா ரறிவிலா தார் . (140)
8/30      எனைத்துணைய ராயினு மென்னாந் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல். (144)
8/29      அறனியலா னில்வாழ்வா னென்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன். (147)
8/29      மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந்
தகுதியான் வென்று விடல். (158)
8/30      அழுக்காற்றி னல்லவை செய்யா ரிழுக்காற்றி
னேதம் படுபாக் கறிந்து. (164)
8/28      அஃகி யகன்ற வறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின். (175)
8/26      அறங்கூறா னல்ல செயினு மொருவன்
புறங்கூறா னென்ற லினிது.  (181)
8/27      பயனில்சொற் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி யெனல். (196)
8/32      தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு. (212)
8/24      ஊருணி நீர்நிறைந் தற்றே யுலகவாம்
பேரறி வாளன் றிரு. (215)
8/26      இன்னா திரக்கப் படுத லிரந்தவ
ரின்முகங் காணு மளவு. (224)
8/25      ஈத லிசைபட வாழ்த லதுவல்ல
தூதிய மில்லை யுயிர்க்கு.  (231)
8/29      ஒன்றா வுலகத் துயர்ந்த புகழல்லாற்
பொன்றாது நிற்பதொன் றில். (233)
8/33      பொருளாட்சி போற்றாதார்க் கில்லை யருளாட்சி
யாங்கில்லை யூன்றின் பவர்க்கு. (252)
8/29      அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் றினல். (254)
8/28      உண்ணாமை யுள்ள துயிர்நிலை யூனுண்ண
வண்ணாத்தல் செய்யா தளறு. (255)
8/28      தன்னனுயிர் தானறப் பெற்றாளை யேனைய
மன்னுயி ரெல்லாந் தொழும். (268)
8/30      புறங்குன்றி கண்டனைய ரேனு மகங்குன்றி
மூக்கிற் கரியா ருடைத்து. (277)
8/31      உள்ளத்தா லுள்ளலுந் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தாற் கள்வே மெனல். (282)
8/29      களவென்னுங் காரறி வாண்மை யளவென்னு
மாற்றல் புரிந்தார்க ணில். (287)
8/31      தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும். (293)
8/28      உள்ளத்தாற் பொய்யா தொழுகி னுலகத்தா
ருள்ளத்து ளெல்லா முளன். (294)
8/26      பொய்யாமை யன்ன புகழில்லை யெய்யாமை
யெல்லா வறமுந் தரும் (296)
8/31      கறுத்தின்னா செய்தவக் கண்ணு மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள். (312)
8/28      எனைத்தானு மெஞ்ஞான்றும் யார்க்கு மனத்தானா
மாணாசெய் யாமை தலை. (317)
8/26      நில்லா தவற்றை நிலையின வென்றுணரும்
புல்லரி வாண்மை கடை.  (331)
8/25      ஆரா வியற்கை யவாநீப்பி னந்நிலையே
பேரா வியற்கை தரும். (370)
8/28      அஞ்சாமை யீகை யறிவூக்க மிந்நான்கு
மெஞ்சாமை வேந்தற் கியல்பு. (382)
8/34      மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்
கற்றா ரனைத்திலர் பாடு. (409)
8/26      விலங்கொடு மக்க ளனைய ரிலங்குநூல்
கற்றாரோ டேனை யவர். (410)
8/28      கற்றில னாயினுங் கேட்க வஃதொருவற்
கொற்கத்தி னூற்றாந் துணை. (414)
8/26      கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியாற்
றோட்கப் படாத செவி. (418)
8/28      சென்ற விடத்தாற் செலவிடா தீதொரீஇ
நன்றின்பா லுய்ப்ப தறிவு. (422)
8/27      எதிரதாக் காக்கு மறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய். (429)
8/27      வியவற்க வெஞ்ஞான்றுந் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை. (439)
8/31      அறன்றிந்து மூத்த வறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல். (441)
8/27      அரியவற்று ளெல்லா மரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல். (443)
8/31      பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல். (450)
8/31      மனத்தானா மாந்தர்க் குணர்ச்சி யினத்தானா
மின்னா னெனப்படுஞ் சொல். (453)
8/29      நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை. (469)
8/29      ஆற்றாரு மாற்றி யடுப விடனறிந்து
போற்றார்கட் போற்றிச் செயின் . (493)
8/26      குணநாடிக் குற்றமு நாடி யவற்றுண்
மிகைநாடி மிக்க கொளல் . (504)
8/27      அற்றாரைத் தேறுத லோம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி. (506)
8/28      காதன்மை கந்தா வறிவறியார்த் தேறுதல்
பேதைமை யெல்லாந் தரும் . (507)
8/26      தேறற்க யாரையுந் தேராது தேர்ந்தபிற்
றேறுக தேறும் பொருள். (509)
8/33      உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்த
னிழைத்திருந் தெண்ணிக் கொளல். (530)
8/30      எண்பதத்தா னோரா முறைசெய்யா மன்னவன்
றண்பதத்தாற் றானே கெடும். (548)
8/30      துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்த
னளியின்மை வாழு முயிர்க்கு . (557)
8/26      கடிதோச்சி மெல்ல வெறிக நெடிதாக்க
நீங்காமை வேண்டு பவர். (562)
8/27      கண்ணோட்டத் துள்ள துலகிய லஃதிலா
ருண்மை நிலக்குப் பொறை. (572)
8/31      கண்ணிற் கணிகலங் கண்ணோட்ட மஃதின்றேற்
புண்ணென் றுணரப் படும். (575)
8/32      துறந்தார் படிவத்த ராகி யிறந்தாராய்ந்
தென்செயினுஞ் சோர்வில தொற்று. (586)
8/28      மறைந்தவை கேட்கவற் றாகி யறிந்தவை
யையப்பா டில்லதே யொற்று. (587)
8/28      ஆக்க மிழந்தேமென் றல்லாவா ரூக்க
மொருவந்தங் கைத்துடை யார். (593)
8/25      ஆக்க மதர்வினாய்ச் செல்லு மசைவிலா
வூக்க முடையா னுழை. (594)
8/28      மடியிலா மன்னவ னெய்து மடியளந்தான்
றாஅய தெல்லா மொருங்கு. (610)
8/31      தாளாண்மை யென்னுந் தகைமைக்கட் டங்கிற்றே
வேளாண்மை யென்னுஞ் செருக்கு . (613)
8/26      மடியுளாண் மாமுகடி யென்ப மடியிலான்
றாளுளா டாமரையி னாள். (617)
8/32      வன்கண் குடிகாத்தல் கற்றறித லாள்வினையோ
டைந்துடன் மாண்ட தமைச்சு. (632)
8/29      ஈன்றாள் பசிகாண்பா னாயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை. (656)
8/29      கடிந்த கடிந்தொரார் செய்தார்க் கவைதா
முடிந்தாலும் பீழை தரும். (658)
8/31      கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை யிடைக்கொட்கி
னெற்றா விழுமந் தரும். (663)
8/28      சொல்லுதல் யார்க்கு மெளிய வரியவாஞ்
சொல்லிய வண்ணஞ் செயல். (664)
8/32      இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லி
னடைதெரிந்த நன்மை யவர். (712)
8/30      ஒளியார்முன் னெள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணங் கொளல். (714)
8/31      ஆற்றி னிலைதளர்ந் தற்றே வியன்புல
மேற்றுணர்வார் முன்ன ரிழுக்கு. (716)
8/30      உளரெனினு மில்லாரொ டொப்பர் களனஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார். (730)
8/26      எல்லாப் பொருளு முடைத்தா யிடத்துதவு
நல்லா ளுடைய தரண். (746)
8/29      செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கு
மெஃகதனிற் கூரிய தில். (759)
8/23      அழிவின் றறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை. (764)
8/32      என்னைமுன் னில்லன்மின் றெவ்விர் பலரென்னை
முன்னின்று கன்னின் றவர்.  (771)
8/26      இழைத்த திகவாமைச் சாவாரை யாரே
பிழைத்த தொறுக்கிற் பவர். (779)
8/28      செயற்கரிய யாவுள நட்பி னதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.  (781)
8/27      நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு. (782)
8/28      முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்
தகநக நட்பது நட்பு. (786)
8/28      அழிவி னவைநீக்கி யாறுய்த் தழிவின்க
ணல்ல லுழப்பதா நட்பு. (787)
8/28      உடுக்கை யிழந்தவன் கைபோல வாங்கே
யிடுக்கண் களைவதா நட்பு. (788)
8/33      எல்லைக்க ணின்றார் துறவார் தொலைவிடத்துந்
தொல்லைக்க ணின்றார் தொடர்பு. (806)
8/30      மனத்தி னமையா தவரை யெனைத்தொன்றுஞ்
சொல்லினாற் றேறற்பாற் றன்று. (825)
8/28      பகைநட்பாங் காலம் வருங்கான் முகநட்
டகநட் பொரீஇ விடல். (830)
8/28      பகல்கருதிப் பற்றா செயினு மிகல்கருதி
யின்னாசெய் யாமை தலை. (852)
8/29      இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிகலூக்குந் தன்மை யவர். (855)
8/28      இகலின் மிகலினி தென்பவன் வாழ்க்கை
தவலுங் கெடலு நணித்து. (856)
8/30      இளைதாக முண்மரங் கொல்க களையுநர்
கைகொல்லுங் காழ்த்த விடத்து. (879)
8/26      நிழனீரு மின்னாத வின்னா தமர்நீரு
மின்னாவா மின்னா செயின்.  (881)
8/26      ஆற்றுவா ராற்ற லிகழாமை போற்றுவார்
போற்றலு ளெல்லாந் தலை.  (891)
8/31      இல்லாள்கட் டாழ்ந்த வியல்பின்மை யெஞ்ஞான்று
நல்லாரு ணாணுத் தரும். (903)
8/27      ஆயு மறிவின ரல்லார்க் கணங்கென்ப
மாய மகளிர் முயக்கு. (918)
8/30      ஈன்றாண் முகத்தேயு மின்னாதா லென்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி. (923)
8/32      துஞ்சினார் செத்தாரின் வேறல்ல ரெஞ்ஞான்று
நஞ்சுண்பார் கள்ளுண் பவர். (926)
8/28      உற்ற னளவும் பிணியளவுங் காலமும்
கற்றான் கருதிச் செயல். (949)
8/29      நலத்தின்க ணாரின்மை தோன்றி னவனைக்
குலத்தின்க ணையப் படும். (958)
8/32      மேலிருந்து மேலல்லார் மேலல்லர் கீழிருந்துங்
கீழல்லார் கீழல் லவர். (973)
8/29      சான்றவர் சான்றாண்மை குன்றி னிருநிலத்தான்
றாங்காது மன்னோ பொறை. (990)
8/33      வைத்தான்வாய் சான்ற பெரும்பொரு ளஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்த தில்.  (1001)
8/32      அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வ மிகநலம்
பெற்றா டமியள்மூத் தற்று. (1007)
8/31      அன்பொரீஇத் தற்செற் றறநோக்கா தீட்டிய
வொண்பொருள் கொள்வார் பிறர். (1009)
8/27      ஊனைக் குறித்த வுயிரெல்லா நாணென்னு
நன்மை குறித்தது சால்பு. (1013)
8/29      அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கஃ தின்றேற்
பிணியன்றோ பீடு நடை. (1014)
8/28      நாணகத் தில்லா ரியக்க மரப்பாவை
நாணா லுயிர்மருட்டி யற்று. (1020)
8/27      ஏரினு நன்றா லெருவிடுதல் கட்டபி
னீரினு நன்றதன் காப்பு. (1038)
8/26      இலமென் றசைஇ யிருப்பாரைக் காணி
னிலமென்னு நல்லா ணகும். (1040)
8/31      இரக்க விரத்தக்கார்க் காணிற் கரப்பி
னவர்பழி தம்பழி யன்று.  (1051)
8/29      இரத்தலு மீதலே போலுங் கரத்தல்
கனவிலுந் தேற்றாதார் மாட்டு. (1054)
8/27      ஈவார்க ணென்னுண்டாந் தோற்ற மிரந்துகோண்
மேவா ரிலாஅக் கடை. . (1059)
8/30      இரந்து முயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து
கெடுக வுலகியற்றி யான்.  (1062)
8/25      ஆவிற்கு நீரென் றிரப்பினு நாவிற்
கிரவி னிளிவந்த தில். (1066)
8/27      மக்களே போல்வர் கயவ ரவரன்ன
வொப்பாரி யாங்கண்ட தில்.  (1071)
8/24      தேவ ரனையர் கயவ ரவருந்தா
மேவன செய்தொழுக லான். (1073)
8/31      ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்குங்
கூன்கைய ரல்லா தவர்க்கு. (1077)
8/31      ஏற்றிற் குரியர் கயவரொன் றுற்றக்கால்
விற்றற் குரியர் விரைந்து!. (1080)
8/31      நோக்கினா ணோக்கெதிர் நோக்குத றாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து. (1082)
8/31      கண்டா ருயிருண்ணுந் தோற்றத்தாற் பெண்டகைப்
பேதைக் கமர்த்தன கண். (1084)
8/28      அசையியற் குண்டாண்டோ ரேஎர்யா னோக்கப்
பசையினள் பைய நகும். (1098)
8/26      ஊடலுணர்தல் புணர்த லிவைகாமங்
கூடியார் பெற்ற பயன் . (1109)
8/27      நன்னீரை வாழி யனிச்சமே நின்னினு
மென்னீரள் யாம்வீழ் பவள் .  (1111)
8/24      மதியு மடந்தை முகனு மறியா
பதியிற் கலங்கிய மீன் . (1116)
8/29      கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணு
மெழுதேங் கரப்பாக் கறிந்து. (1127)
8/25      காம முழந்து வருந்தினார்க் கேம
மடலல்ல தில்லை வலி .  (1131)
8/28      கடலன்ன காம முழந்து மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில் . (1137)
8/29      அலர்நாண வொல்வதோ வஞ்சலோம் பென்றார்
பலர்நாண நீத்தக் கடை. (1149)
8/32      அளித்தஞ்ச லென்றவர் நீப்பிற் றெளித்தசொற்
றேறியார்க் குண்டோ தவறு. (1154)
8/27      காமக் கடும்புன னீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே யுளேன். (1167)
8/25      கொடியார் கொடுமையிற் றாங்கொடிய விந்நா
ணெடிய கழியு மிரா. (1169)
8/26      ஓஒ வினிதே யெமக்கிந்நோய் செய்தகண்
டாஅ மிதற்பட் டது. (1176)
8/31      உழந்துழந் துண்ணீ ரறுக விழைந்திழைந்து
வேண்டி யவர்க்கண்ட கண் (1177)
8/26      நசைஇயார் நல்கா ரெனினு மவர்மாட்
டிசையு மினிய செவிக்கு. (1199)
8/27      யாமு முளேங்கொ லவர்நெஞ்சத் தெந்நெஞ்சத்
தோஒ வுளரே யவர். (1204)
8/30      எனைத்து நினைப்பினுங் காயா ரனைத்தன்றோ
காதலர் செய்யுஞ் சிறப்பு. (1208)
8/28      நனவினாற் கண்டதூஉ மாங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே யினிது. (1215)
8/22      காத லவரில ராகநீ நோவது
பேதைமை வாழியென் னெஞ்சு . (1242)
8/30      கண்ணுங் கொளச்சேறி நெஞ்சே யிவையென்னைத்
தின்னு மவர்க்காண லுற்று . (1244)
8/31      இலங்கிழா யின்று மறப்பினென் றோண்மேற்
கலங்கழியுங் காரிகை நீத்து. (1262)
8/27      நெருநற்றுச் சென்றாரெங் காதலர் யாமு
மெழுநாளே மேனி பசந்து!. (1278)
8/32      உள்ளக் களித்தலுங் காண மகிழ்தலுங்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.  (1281)
8/25      பேணாது பெட்பவே செய்யினுங் கொண்கனைக்
காணா தமையல கண். (1283)
8/32      ஊடற்கட் சென்றேன்மற் றோழி யதுமறந்து
கூடற்கட் சென்றதென் னெஞ்சு (1284)
8/32      எழுதுங்காற்கோல்காணாக் கண்ணேபோற்கொண்கன்
பழிகாணேன் கண்ட விடத்து. (1285)
8/32      அலந்தாரை யல்லனோய் செய்தற்றாற் றம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல். (1303)
8/23      ஊடி யவரை யுணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று . (1304)
8/25      யாரினுங் காதல மென்றேனா ஊடினாள்
யாரினும் யாரினு மென்று. (1314)
8/29      தன்னை யுணர்த்தினுங் காயும் பிறர்க்குநீ
ரிந்நீர ராகுதி ரென்று. (1319)
9/25      அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு. (1)
9/29      வேண்டுதல் வேண்டாமை யிலானடி சேர்ந்தார்க்
கியாண்டு மிடும்பை யில. (4)
9/30      பொறிவாயி லைந்தவித்தான் பொய்தீ ரொழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார். (6)
9/26      ஏரி னுழாஅ ருழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால். (14)
9/29      தானந் தவமிரண்டுந் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின். (19)
9/28      நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு. (20)
9/31      துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்
திறந்தாரை யெண்ணிக்கொண் டற்று. (22)
9/28      குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்த லரிது. (29)
9/32      வீழ்நாள் படாஅமை நன்றாற்றி னஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல். (38)
9/31      பழியஞ்சிப் பாத்தூ ணுடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்ச லெஞ்ஞான்று மில். (44)
9/33      அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற்
போஒய்ப் பெறுவ தெவன். (46)
9/30      இயல்பினா னில்வாழ்க்கை வாழ்பவ னென்பான்
முயல்வாரு ளெல்லாந் தலை. (47)
9/30      புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை யிகழ்வார்முன்
னேறுபோற் பீடு நடை. (59)
9/28      மங்கல மென்ப மனைமாட்சி மற்றத
னன்கல நன்மக்கட் பேறு. (60)
9/26      அமிழ்தினு மாற்ற வினிதேதம் மக்கள்
சிறுகை யளாவிய கூழ். (64)
9/32      மகன்றந்தைக் காற்று முதவி யிவன்றந்தை
யென்னோற்றான் கொல்லெனுஞ் சொல். (70)
9/32      அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்
தின்புற்றா ரெய்துஞ் சிறப்பு. (75)
9/31      அன்பின் வழிய துயிர்நிலை யஃதிலார்க்
கென்புதோல் போர்த்த வுடம்பு. (80)
9/30      தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்றெரி வார். (104)
9/34      எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு (110)
9/29      செப்ப முடையவ னாக்கஞ் சிதைவின்றி
யெச்சத்திற் கேமாப் புடைத்து. (112)
9/29      செறிவறிந்து சீர்மை பயக்கு மறிவறிந்
தாற்றி னடங்கப் பெறின். (123)
9/33      எல்லார்க்கு நன்றாம் பணித லவருள்ளுஞ்
செல்வர்க்கே செல்வந் தகைத்து. (125)
9/24      தீயினாற் சுட்டபு ணூள்ளாறு மாறாதே
நாவினாற் சுட்ட வடு . (129)
9/30      அழுக்கா றுடையான்க ணாக்கம்போன் றில்லை
யொழுக்க மிலான்க ணுயர்வு . (135)
9/30      விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரிற்
றீமை புரிந்தொழுகு வார் . (143)
9/29      நலக்குரியார் யாரெனி னாமநீர் வைப்பிற்
பிறற்குரியா டோடோயா தார். (149)
9/26      பொறுத்த லிறப்பினை யென்று மதனை
மறத்த லதனினு நன்று. (152)
9/30      துறந்தாரிற் றூய்மை யுடைய சிறந்தார்வா
யின்னாச்சொ னோற்கிற் பவர். (159)
9/30      ஒழுக்காறாக் கொள்க வொருவன்றன் னெஞ்சத்
தழுக்கா றிலாத வியல்பு.  (161)
9/29      வேண்டற்க வெஃகியா மாக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன். (177)
9/33      கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க
முன்னின்று பின்னோக்காச் சொல். (184)
9/32      பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாட றேற்றா தவர். (187)
9/28      நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று. (197)
9/29      சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல். (200)
9/24      தீயவே தீய பயத்தலாற் றீயவை
தீயினு மஞ்சப் படும். (202)
9/30      இலனென்று தீயவை செய்யற்க செய்யி
னிலனாகும் மற்றும் பெயர்த்து. (205)
9/31      வறியார்க்கொன் றீவதே யீகைமற் றெல்லாங்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.  (221)
9/26      நல்லா றெனினுங் கொளறீது மேலுலக
மில்லெனினு மீதலே நன்று. (222)
9/26      இலனென்னு மெவ்வ முரையாமை யீதல்
குலனுடையான் கண்ணே யுள. (223)
9/29      ஆற்றுவா ராற்றல் பசியாற்ற லப்பசியை
மாற்றுவா ராற்றலிற் பின். (225)
9/30      நத்தம்போற் கேடு முளதாகுஞ் சாக்காடும்
வித்தகர்க் கல்லா லரிது. (235)
9/29      வசையென்ப வையத்தார்க் கெல்லா மிசையென்னு
மெச்சம் பெறாஅ விடின். (238)
9/26      வசையிலா வண்பயன் குன்று மிசையிலா
யாக்கை பொறுத்த நிலம். (239)
9/30      தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றாற் றேரி
னருளாதான் செய்யு மறம். (249)
9/30      வானுயர் தோற்ற மெவன்செய்யுந் தன்னெஞ்சந்
தானறி குற்றப் படின். (272)
9/31      நெஞ்சிற் றுறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணா ரில். (276)
9/30      எள்ளாமை வேண்டுவா னென்பா னெனைத்தொன்றுங்
கள்ளாமை காக்கதன் னெஞ்சு.  (281)
9/24      களவினா லாகிய வாக்க மளவிறந்
தாவது போலக் கெடும். (283)
9/28      களவின்கட் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமந் தரும். (284)
9/32      கள்வார்க்குத் தள்ளு முயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தே ளுலகு. (290)
9/27      பொய்யாமை பொய்யாமை யாற்றி னறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று. (297)
9/30      யாமெய்யாக் கண்டவற்று ளில்லை யெனைத்தொன்றும்
வாய்மையி னல்ல பிற. (300)
9/32      சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று. (307)
9/29      இன்னா வெனத்தா னுணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கட் செயல். (316)
9/26      அறவினை யாதெனிற் கொல்லாமை கோறல்
பிறவினை யெல்லாம் தரும்.  (321)
9/30      தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி
தின்னுயிர் நீக்கும் வினை. (327)
9/28      கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து. (329)
9/32      தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர். (348)
9/33      சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய். (359)
9/33      கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர் (393)
9/31      கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டு
மில்லாதாள் பெண்காமுற் றற்று. (402)
9/33      செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வ மச்செலவஞ்
செல்வத்து ளெல்லாந் தலை.  (411)
9/30      அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கு
முள்ளழிக்க லாகா வரண்.  (421)
9/25      அஞ்சுவ தஞ்சாமை பேதைமை யஞ்சுவ
தஞ்ச லறிவார் தொழில்.  (428)
9/29      மனநல நன்குடைய ராயினுஞ் சான்றோர்க்
கினநல மேமாப் புடைத்து. (458)
9/29      அமைந்தாங் கொழுகா னளவறியான் றன்னை
வியந்தான் விரைந்து கெடும் . (474)
9/25      ஆற்றி னளவறிந் தீக வதுபொருள்
போற்றி வழங்கும் நெறி (477)
9/24      அருவினை யென்ப வுளவோ கருவியாற்
கால மறிந்து செயின் (483)
9/25      காலங் கருதி யிருப்பர் கலங்காது
ஞாலங் கருது பவர் . (485)
9/25      கடலோடா கால்வ னெடுந்தேர் கடலோடு
நாவாயு மோடா நிலத்து . (496)
9/28      சிறைநலனுஞ் சீரு மிலரெனினு மாந்த
ருறைநிலத்தோ டொட்ட லரிது . (499)
9/25      தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா விடும்பை தரும். (508)
9/27      தேரான் றெளிவுந் தெளிந்தான்க ணையுறவுந்
தீரா விடும்பை தரும் . (510)
9/30      அன்பறிவு தேற்ற மவாவின்மை யிந்நான்கு
நன்குடையான் கட்டே தெளிவு. (513)
9/30      எனைவகையாற் றேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகு மாந்தர் பலர். (514)
9/28      வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்குந் திரு. (519)
9/29      பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே யுள.  (521)
9/33      புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டுஞ் செய்யா
திகழ்ந்தார்க் கெழுமையு மில். (538)
9/28      உள்ளிய தெய்த லெளிதுமன் மற்றுந்தா
னுள்ளிய துள்ளப் பெறின் . (540)
9/31      ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டுந்
தேர்ந்துசெய் வஃதே முறை.  (541)
9/29      அந்தணர் நூற்கு மறத்திற்கு மாதியாய்
நின்றது மன்னவன் கோல் .  (543)
9/27      குடிதழீஇக் கோலோச்சு மாநில மன்ன
னடிதழீஇ நிற்கு முலகு. (544)
9/29      கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர். (550)
9/28      இன்மையி னின்னா துடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின். (558)
9/29      உளபோன் முகத்தெவன் செய்யு மளவினாற்
கண்ணோட்ட மில்லாத கண். (574)
9/32      கண்ணோட்ட மில்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்ட மின்மையு மில். (577)
9/33      எல்லார்க்கு மெல்லா நிகழ்பவை யெஞ்சான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில். (582)
9/31      ஒற்றினா னொற்றிப் பொருடெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்த தில். (583)
9/32      சிறப்பறிய வொற்றின்கட் செய்யற்க செய்யிற்
புறப்படுத்தா னாகு மறை. (590)
9/27      நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். (605)
9/32      வினைக்கண் வினைகெட லோம்பல் வினைக்குறை
தீர்ந்தாரிற் றீர்ந்தன் றுலகு. (612)
9/26      தாளாண்மை யில்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும். (614)
9/28      பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந்
தாள்வினை யின்மை பழி. (618)
9/28      தெய்வத்தா னாகா தெனினு முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். (619)
9/32      இலக்க முடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதா மேல். (627)
9/31      சொலல்வல்லன் சோர்வில னஞ்சா னவனை
யிகல்வெல்லல் யார்க்கு மரிது. (647)
9/29      பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்ல றேற்றா தவர். (649)
9/34      சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமட்
கலத்துணீர் பெய்திரீஇ யற்று. (660)
9/29      செய்வினை செய்வான் செயன்முறை யவ்வினை
யுள்ளறிவா னுள்ளங் கொளல். (677)
9/31      அறிவுரு வாராய்ந்த கல்வியிம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு. (684)
9/29      போற்றி னரியவை போற்றல் கடுத்தபின்
றேற்றுதல் யார்க்கு மரிது. (693)
9/27      இளைய ரினமுறைய ரென்றிகழார் நின்ற
வொளியோ டொழுகப் படும் (698)
9/30      அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின்
றொகையறிந்த தூய்மை யவர்.  (711)
9/32      கற்றாருட் கற்றா ரெனப்படுவர் கற்றார்முற்
கற்ற செலச்சொல்லு வார். (722)
9/23      மணிநீரு மண்ணு மலையு மணிநிழற்
காடு முடைய தரண். (742)
9/29      முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்ட தரண். (749)
9/30      இல்லாரை யெல்லாரு மெள்ளுவர் செல்வரை
யெல்லாருஞ் செய்வர் சிறப்பு. (752)
9/29      சுழலு மிசைவேண்டி வேண்டா வுயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து. (777)
9/29      புணர்ச்சி பழகுதல் வேண்டா வுணர்ச்சிதா
னட்பாங் கிழமை தரும். (785)
9/25      கேட்டினு முண்டோ ருறுதி கிளைஞரை
நீட்டி யளப்பதோர் கோல்.  (796)
9/30      பழைமை யெனப்படுவ தியாதெனின் யாதுங்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.  (801)
9/29      பேதைமை யொன்றோ பெருங்கிழமை யென்றுணர்க
நோதக்க நட்டார் செயின். (805)
9/28      அழிவந்த செய்யினு மன்பறா ரன்பின்
வழிவந்த கேண்மை யவர். (807)
9/26      கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையு முலகு. (809)
9/34      சொல்வணக்க மொன்னார்கட் கொள்ளற்க வில்வணக்கந்
தீங்கு குறித்தமை யான். (827)
9/26      பேதைமை யென்பதொன் றியாதெனி னேதங்கொண்
டூதியம் போக விடல்.  (831)
9/28      ஏதிலா ராரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வ முற்றக் கடை. (837)
9/26      மைய லொருவன் களித்தற்றாற் பேதைதன்
கையொன் றுடைமை பெறின். (838)
9/32      கழா அக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல். (840)
9/26      அற்ற மறைத்தலோ புல்லறிவு தம்வயிற்
குற்ற மறையா வழி. (846)
9/29      நீங்கான் வெகுளி நிறையில னெஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கு மெளிது. (864)
9/26      எட்பக வன்ன சிறுமைத்தே யாயினு
முட்பகை யுள்ளதாங் கேடு. (889)
9/30      கெடல்வேண்டிற் கேளாது செய்க வடல்வேண்டி
னாற்று பவர்க ணிழுக்கு. (893)
9/26      மனையாளை யஞ்சு மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்த லின்று. (904)
9/32      நட்டார் குறைமுடியார் நன்றற்றார் நன்னுதலாள்
பெட்டாங் கொழுகு பவர். (908)
9/31      பொதுநலத்தார் புன்னலந் தோயார் மதிநலத்தின்
மாண்ட வறிவி னவர். (915)
9/33      கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கா
லுள்ளான்கொ லுண்டதன் சோர்வு. (930)
9/28      அகடாரா ரல்ல லுழப்பர் சூதென்னு
முகடியான் முடப்பட் டா ர்.  (936)
9/29      மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய
தற்றது போற்றி யுணின்.  (942)
9/29      இழிவறிந் துண்பான்க ணின்பம்போ னிற்குங்
கழிபே ரிரையான்க ணோய். (946)
9/26      தீயன வன்றித் தெரியான் பெரிதுண்ணி
னோயள வன்றிப் படும். (947)
9/31      இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை யியல்பாகச்
செப்பமு நாணு மொருங்கு.  (951)
9/25      சீரினுஞ் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர். (962)
9/26      குன்றி னனை யாருங் குன்றுவர் குன்றுவ
குன்றி யனைய செயின். (965)
9/29      குணநலஞ் சான்றோர் நலனே பிறநல
மெந்நலத் துள்ளதூஉ மன்று. (982)
9/27      கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு. (984)
9/31      பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வ நன்பால்
கலத்தீமை யாற்றிரிந் தற்று. (1000)
9/25      ஈட்ட மிவறி யிசைவேண்டா வாடவர்
தோற்ற நிலக்குப் பொறை. (1003)
9/32      ஏதம் பெருஞ்செல்வந் தான்றுவ்வான் றக்கார்க்கொன்
றீத லியல்பிலா தான். (1006)
9/27      சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனைய துடைத்து. (1010)
9/27      இடுக்கண்கால் கொன்றிட வீழு மடுத்தூன்று
நல்லா ளிலாத குடி. (1030)
9/25      இன்ப மொருவற் கிரத்த லிரந்தவை
துன்ப முறாஅ வரின். (1052)
9/31      கரப்பில்லா நெஞ்சிற் கடனறிவார் முன்னின்
றிரப்புமோ ரேஎ ருடைத்து, (1053)
9/28      யானோக்குங் காலை நிலநோக்கு நோக்காக்காற்
றானோக்கி மெல்ல நகும். (1094)
9/26      ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே யுள. (1099)
9/28      கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்க
ளென்ன பயனு மில. (1100)
9/30      உறுதோ றுயிர்தளிப்பத் தீண்டலாற் பேதைக்
கமிழ்தி னியன்றன தோள். (1106)
9/23      மாதர் முகம்போ லொளிவிட வல்லையேற்
காதலை வாழி மதி . (1118)
9/29      நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்ட
லஞ்சுதும் வேபாக் கறிந்து . (1128)
9/26      நாணொடு நல்லாண்மை பண்டுடையே னின்றுடை
காமுற்றா ரேறு மடல். (1133)
9/28      அரிதரோ தேற்ற மறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான். (1153)
9/28      பிரிவுரைக்கும் வன்கண்ண ராயி னரிதவர்
நல்குவ ரென்னு நசை. (1156)
9/27      துறைவன் றுறந்தமை தூற்றாகொன் முன்கை
யிறையிறவா நின்ற வளை. (1157)
9/30      கரத்தலு மாற்றேனிந் நோயைநோய் செய்தார்க்
குரைத்தலு நாணுத் தரும்.  (1162)
9/29      பெயலாற்றா நீருலந்த வுண்க ணுயலாற்றா
வுய்வினோ யென்க ணிறுத்து. (1174)
9/27      வீழ்வாரி னின்சொற் பெறாஅ துலகத்து
வாழ்வாரின் வன்கணா ரில். (1198)
9/28      உறாஅர்க் குறுநோ யுரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு. (1200)
9/28      விளியுமெ னின்னுயிர் வேறல்ல மென்பா
ரளியின்மை யாற்ற நினைந்து. (1209)
9/30      துஞ்சுங்காற் றோண்மேல ராகி விழிக்குங்கா
னெஞ்சத்த ராவர் விரைந்து. (1218)
9/28      புன்கண்ணை வாழி மருண்மாலை யெங்கேள்போல்
வன்கண்ண தோநின் றுணை. (1222)
9/34      பரிந்தவர் நல்காரென் றேங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதையென் நெஞ்சு. (1248)
9/28      துன்னாத் துறந்தாரை நெஞ்சத் துடையேமா
வின்னு மிழத்துங் கவின். (1250)
9/28      காம மெனவொன்றோ கண்ணின்றென் னெஞ்சத்தை
யாமத்து மாளுந் தொழில். (1252)
9/30      புலப்ப லெனச்சென்றேன் புல்லினே னெஞ்சங்
கலத்த லுறுவது கண்டு. (1259)
9/31      வாளாற்றுப் புற்கென்ற கண்ணு மவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.  (1261)
9/30      மணியிற் றிகழ்தரு நூல்போன் மடந்தை
யணியிற் றிகழ்வதொன் றுண்டு. (1273)
9/27      தண்ணந் துறைவன் றணந்தமை நம்மினு
முன்ன முணர்ந்த வளை . (1277)
9/28      தொடிநோக்கி மென்றோளு நோக்கி யடிநோக்கி
யஃதாண் டவள்செய் தது. (1279)
9/29      பெண்ணினாற் பெண்மை யுடைத்தென்ப கண்ணினாற்
காமநோய் சொல்லி யிரவு.  (1280)
9/31      கண்ணிற் றுனித்தே கலங்கினாள் புல்லுத
லென்னினுந் தான்விதுப் புற்று. (1290)
9/28      நாணு மறந்தே னவர்மறக் கல்லாவென்
மாணா மடநெஞ்சிற் பட்டு. (1297)
9/27      புல்லா திராஅப் புலத்தை யவருறு
மல்லனோய் காண்கஞ் சிறிது.  (1301)
9/24      நீரும் நிழல தினிதே புலவியும்
வீழுநர் கண்ணே யினிது. (1309)
9/33      பெண்ணியலா ரெல்லாருங் கண்ணிற் பொதுவுண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.  (1311)
9/29      இம்மைப் பிறப்பிற் பிரியல மென்றேனாக்
கண்ணிறை நீர்கொண்டனள். (1315)
9/25      உணலினு முண்ட தறலினிது காமம்
புணர்தலி னூட லினிது. (1326)
10/28      சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே யுலகு. (27)
10/33      அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ்
செந்தண்மை பூண்டொழுக லான். (30)
10/26      ஒல்லும் வகையா னறவினை யோவாதே
செல்லும்வா யெல்லாஞ் செயல். (33)
10/29      அழுக்கா றவாவெகுளி யின்னாச்சொன் னான்கு
மிழுக்கா வியன்ற தறம். (35)
10/27      அறத்தான் வருவதே யின்பமற் றெல்லாம்
புறத்த புகழு மில. (39)
10/33      அறனெனப் பட்டதே யில்வாழ்க்கை யஃதும்
பிறன்பழிப்ப தில்லாயி னன்று. (49)
10/30      பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னுந்
திண்மையுண் டாகப் பெறின். (54)
10/30      சிறைகாக்குங் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்குங் காப்பே தலை. (57)
10/33      மக்கண்மெய் தீண்ட லுடற்கின்ப மற்றவர்
சொற்கேட்ட லின்பஞ் செவிக்கு. (65)
10/30      இன்சொலா லீர மளைஇப் படிறிலவாஞ்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். (91)
10/26      பணிவுடைய னின்சொல னாத லொருவற்
கணியல்ல மற்றுப் பிற. (95)
10/30      இனிய வுளவாக வின்னுத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. (100)
10/29      நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்று. (108)
10/29      கொன்றன்ன வின்னா செயினு மவர்செய்த
வொன்றுநன் றுள்ளக் கெடும். (109)
10/29      கேடும் பெருக்கமு மில்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி . (115)
10/27      ஒன்றானுந் தீச்சொற் பொருட்பய னுண்டாயி
னன்றாகா தாகி விடும் . (128)
10/30      அறன்வரையா னல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று. (150)
10/30      அறனாக்கம் வேண்டாதா னென்பான் பிறனாக்கம்
பேணா தழுக்கறுப் பான். (163)
10/28      அழுக்கா றுடையார்க் கதுசாலு மொன்னார்
வழுக்கியுங் கேடீன் பது. (165)
10/28      அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவ
டவ்வையைக் காட்டி விடும். (167)
10/29      அவ்விய நெஞ்சத்தா னாக்கமுஞ் செவ்வியான்
கேடு நினைக்கப் படும். (169)
10/30      சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர். (173)
10/31      இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர். (174)
10/32      அருள்வெஃகி யாற்றின்க ணின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும். (176)
10/28      துன்னியார் குற்றமுந் தூற்று மரபினா
ரென்னைகொ லேதிலார் மாட்டு?. (188)
10/25      நயனில னென்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கு முரை. (193)
10/32      நயன்சாரா நன்மையி னீக்கும் பயன்சாராப்
பண்பில்சொற் பல்லா ரகத்து. (194)
10/26      சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின். (195)
10/31      பொருடீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருடீர்ந்த
மாசறு காட்சி யவர். (199)
10/28      தீவினையா ரஞ்சார் விழுமியா ரஞ்சுவர்
தீவினை யென்னுஞ் செருக்கு.  (201)
10/31      பயன்மர முள்ளூர்ப் பழுத்தற்றாற் செல்வ
நயனுடை யான்கட் படின். (216)
10/32      மருந்தாகித் தப்பா மரத்தற்றாற் செல்வம்
பெருந்தகை யான்கட் படின். (217)
10/29      இடனில் பருவத்து மொப்புரவிற் கொல்கார்
கடனறி காட்சி யவர். (218)
10/28      அற்றா ரழிபசி தீர்த்த லஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. (226)
10/27      பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந்
தீப்பிணி தீண்ட லரிது. (227)
10/27      நிலவரை நீள்புக ழாற்றிற் புலவரைப்
போற்றாது புத்தே ளுலகு. (234)
10/34      அருளில்லார்க் கவ்வுலக மில்லை பொருளில்லார்க்
கிவ்வுலக மில்லாகி யாங்கு. (247)
10/28      பொருளற்றார் பூப்ப ரொருகா லருளற்றா
ரற்றார்மற் றாத லரிது. (248)
10/29      அவிசொரிந் தாயிரம் வேட்டலி னொன்ற
னுயிர்செகுத் துண்ணாமை நன்று. (259)
10/30      உற்றநோய் நோன்ற லுயிர்க்குறுகண் செய்யாமை
யற்றே தவத்திற் குரு.  (261)
10/29      ஒன்னார்த் தெறலு முவந்தாரை யாக்கலு
மெண்ணிற் றவத்தான் வரும். (264)
10/28      வேண்டிய வேண்டியாங் கெய்தலாற் செய்தவ
மீண்டு முயலப் படும். (265)
10/30      கூற்றங் குதித்தலுங் கைகூடு நோற்றலி
னாற்ற றலைப்பட் டவர்க்கு. (269)
10/28      மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர். (278)
10/27      கணைகொடிதி யாழ்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலாற் கொளல். (279)
10/27      வாய்மை யெனப்படுவ தியாதெனின் யாதொன்றுந்
தீமை யிலாத சொலல்.  (291)
10/27      மனத்தோடு வாய்மை மொழியிற் றவத்தொடு
தானஞ்செய் வாரிற் றலை. (295)
10/28      மறுத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய
பிறத்த லதனான் வரும்.  (303)
10/27      இணரெரி தோய்வன்ன வின்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று. (308)
10/28      செய்யாமை செற்றர்க்கு மின்னாத செய்தபி
னுய்யா விழுமந்தரும். (313)
10/27      அறிவினா னாகுவ துண்டோ பிறிதினோய்
தந்நோய்போற் போற்றாக் கடை (315)
10/32      பிறர்க்கின்னா முற்பகற் செய்யிற் றமக்கின்னா
பிற்பகற் றாமே வரும். (319)
10/29      ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று. (323)
10/27      நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங்
கொல்லாமை சூழு நெறி. (324)
10/31      நன்றாகு மாக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக்
கொன்றாகு மாக்கங் கடை. (328)
10/32      உயிருடம்பி னீக்கியா ரென்ப செயிருடம்பிற்
செல்லாத்தீ வாழ்க்கை யவர். (330)
10/28      அற்கா வியல்பிற்றுச் செல்வ மதுபெற்றா
லற்குப வாங்கே செயல். (333)
10/25      இருவேறுலகத் தியற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு. (374)
10/24      படைகுடி கூழமைச்சு நட்பர ணாறு
முடையா னரசரு ளேறு.  (381)
10/30      இயற்றலு மீட்டலுங் காத்தலுங் காத்த
வகுத்தலும் வல்ல தரசு. (385)
10/29      தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறு மறிவு. (396)
10/28      தாமின் புறுவ துலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார். (399)
10/26      எனைத்தானு நல்லவை கேட்க வனைத்தானு
மான்ற பெருமை தரும். (416)
10/32      பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர். (417)
10/26      குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
யற்றந் தரூஉம் பகை!. (434)
10/32      தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பி
னென்குற்ற மாகு மிறைக்கு. (436)
10/26      தம்மிற் பெரியார் தமரா வொழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை. (444)
10/28      மனநல மன்னுயிர்க் காக்க மினநல
மெல்லாப் புகழுந் தரும். (457)
10/32      நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தி
னல்லற் படுப்பதூஉ மில். (460)
10/26      தெளிவி லதனைத் தொடங்கா ரிளிவென்னு
மேதப்பா டஞ்சு பவர். (464)
10/29      எள்ளாத வெண்ணிச் செயல்வேண்டுந் தம்மொடு
கொள்ளாத கொள்ளா துலகு . (470)
10/29      நுனிக்கொம்ப ரேறினா ரஃதிறந் தூக்கி
னுயிர்க்கிறுதி யாகி விடும் (476)
10/30      அளவறிந்து வாழாதான் வாழ்க்கை யுளபோல
வில்லாகித் தோன்றாக் கெடும் (479)
10/30      அறம்பொரு ளின்ப முயிரச்ச நான்கின்
றிறந்தெரிந்து தேறப் படும்.  (501)
10/34      சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான்
பெற்றத்தாற் பெற்ற பயன் . (524)
10/29      தமராகித் தற்றுறந்தார் சுற்ற மமராமைக்
காரண மின்றி வரும் . (529)
10/27      முன்னுறக் காவா திழுக்கியான் றன்பிழை
பின்னூ றிரங்கி விடும் . (535)
10/34      இகழ்ச்சியிற் கெட்டாரை யுள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து. (539)
10/28      இறைகாக்கும் வையக மெல்லா மவனை
முறைகாக்கும் முட்டாச் செயின். (547)
10/22      நாடொறு நாடி முறைசெய்யா மன்னவ
னாடொறு நாடு கெடும் . (553)
10/33      மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை யஃதின்றேன்
மன்னாவா மன்னர்க் கொளி. (556)
10/31      தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தா
லொத்தங் கொறுப்பது வேந்து.  (561)
10/32      இறைகடிய னென்றுரைக்கு மின்னாச்சொல் வேந்த
னுறைகடுகி யொல்லைக் கெடும்: (564)
10/29      கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோ லதுவல்ல
தில்லை நிலக்குப் பொறை. (570)
10/32      பெயக்கண்டு நஞ்சுண் டமையவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர். (580)
10/29      ஒற்று முரைசான்ற நூலு மிவையிரண்டுந்
தெற்றென்க மன்னவன் கண்.  (581)
10/27      கடாஅ வுருவொடு கண்ணஞ்சா தியாண்டு
முகாஅமை வல்லதே யொற்று. (585)
10/31      உள்ளுவ தெல்லா முயர்வுள்ளன் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து. (596)
10/27      உள்ள மிலாதவ ரெய்தா ருலகத்து
வள்ளிய மென்னுஞ் செருக்கு. (598)
10/24      மடியை மடியா வொழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர். (602)
10/32      படியுடையார் பற்றமைந்தக் கண்ணு மடியுடையார்
மாண்பய னெய்த லரிது. (606)
10/31      இடிபுரிந் தெள்ளுஞ்சொற் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட வுஞற்றி லவர். (607)
10/28      வெள்ளத் தனைய விடும்பை யறிவுடையா
னுள்ளத்தி னுள்ளக் கெடும். (622)
10/29      இன்னாமை யின்ப மெனக்கொளி னாகுந்தன்
னொன்னார் விழையுஞ் சிறப்பு. (630)
10/28      நாநல மென்னு நலனுடைமை யந்நலம்
யாநலத் துள்ளதூஉ மன்று.  (641)
10/31      விரைந்து தொழில்கேட்கு ஞால நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின். (648)
10/29      சூழ்ச்சி முடிவு துணிவெய்த லத்துணிவு
தாழ்ச்சியுட் தங்குத றீது.  (671)
10/28      தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை. (672)
10/30      தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது. (685)
10/32      அகலா தணுகாது தீக்காய்வார் போல்க
விகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.  (691)
10/30      செவிச்சொல்லுஞ் சேர்ந்த நகையு மவித்தொழுக
லான்ற பெரியா ரகத்து. (694)
10/27      கூறாமை நோக்கிக் குறிப்பறிவா னெஞ்ஞான்று
மாறாநீர் வையக் கணி.  (701)
10/28      ஐயப் படாஅ தகத்த துணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல். (702)
10/30      ஆற்றி னளவறிந்து கற்க வவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு (725)
10/29      பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையு
ணன்கு செலச்சொல்லா தார். (728)
10/29      தள்ளா விளையுளுந் தக்காருந் தாழ்விலாச்
செல்வருஞ் சேர்வது நாடு.  (731)
10/28      ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு. (740)
10/30      உயர்வகலந் திண்மை யருமையிந் நானகி
னமைவர ணென்றுரைக்கு நூல். (743)
10/30      முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வ தரண். (748)
10/27      அறனீனு மின்பமு மீனுந் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள். (754)
10/31      உலைவிடத் தூறஞ்சா வன்கண் டொலைவிடத்துத்
தொல்படைக் கல்லா லரிது. (762)
10/28      ஒலித்தக்கா லென்னா முவரி யெலிப்பகை
நாக முயிர்ப்பக் கெடும். (763)
10/28      மறமான மாண்ட வழிச்செலவு தேற்ற
மெனநான்கே யேமம் படைக்கு. (766)
10/28      பேராண்மை யென்ப தறுகணொன் றுற்றக்கா
லூராண்மை மற்றத னெஃகு. (773)
10/33      நகுதற் பொருட்டன்று நட்டன் மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு. (784)
10/25      பேதை பெருங்கெழீஇ நட்பி னறிவுடையா
ரேதின்மை கோடி யுறும். (816)
10/28      நகைவகைய ராகிய நட்பிற் பகைவராற்
பத்தடுத்த கோடி யுறும். (817)
10/23      நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில். (833)
10/32      ஓதி யுணர்ந்தும் பிறர்க்குரைத்துந் தானடங்காப்
பேதையிற் பேதையா ரில். (834)
10/27      பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கட்
பீழை தருவதொன் றில். (839)
10/27      கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉ மையந் தரும். (845)
10/27      ஏவவுஞ் செய்கலான் றான்றேறா னவ்வுயிர்
போஒ மளவுமோர் நோய். (848)
10/30      உலகத்தா ருண்டென்ப தில்லென்பான் வையத்
தலகையா வைக்கப் படும். (850)
10/31      இகலென்னு மெவ்வநோய் நீக்கிற் றவலில்லாத்
தாவில் விளக்கந் தரும். (853)
10/27      காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும். (866)
10/26      கல்லான் வெகுளுஞ் சிறுபொரு ளெஞ்ஞான்று
மெல்லானை யொல்லா தொளி. (870)
10/34      தற்றுணை யின்றாற் பகையிரண்டாற் றானொருவ
னின்றுணையாக் கொள்கவற்றி னொன்று. (875)
10/32      உயிர்ப்ப வுளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார். (880)
10/31      உட்பகை அஞ்சித்தற் காக்க வுலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும். (883)
10/29      ஒன்றாமை யொன்றியார் கட்படி னெஞ்ஞான்றும்
பொன்றாமை யொன்ற லரிது. (886)
10/28      ஏந்திய கொள்கையார் சீறி னிடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும். (899)
10/27      இமையாரின் வாழினும் பாடிலரே யில்லா
ளமையார்தோ ளஞ்சு பவர். (906)
10/25      கையறியாமை யுடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல். (925)
10/29      பழகிய செல்வமும் பண்புங் கெடுக்குங்
கழகத்துக் காலை புகின். (937)
10/26      உடைசெல்வ மூணொளி கல்வியென் றைந்து
மடையாவா மாயங் கொளின். (939)
10/30      நோய்நாடி நோயமுதல் நாடி யதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல். (948)
10/28      நகையீகை யின்சொ லிகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு. (953)
10/29      அடுக்கிய கோடி பெறினுங் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்த லிலர். (954)
10/25      இன்றிய மையாச் சிறப்பின வாயினுங்
குன்ற வருப விடல்.  (961)
10/33      ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலினந்நிலையே
கெட்டா னெனப்படுத னன்று. (967)
10/23      இளிவரின் வாழாத மான முடையா
ரொளிதொழு தேத்து முலகு. (970)
10/23      பெருமை யுடையவ ராற்றுவா ராற்றி
னருமை யுடைய செயல். (975)
10/33      கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு  (981)
10/27      ஆற்றுவா ராற்றல் பணித லதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை. (985)
10/28      ஊழி பெயரினுந் தாம்பெயரார் சான்றாண்மைக்
காழி யெனப்படு வார். (989)
10/28      எச்சமென் றென்றெண்ணுங் கொல்லோ வொருவரா
னச்சப் படாஅ தவன். (1004)
10/25      கருமத்தா னாணுத னாணுத் திருநுத
னல்லவர் நாணுப் பிற.  (1011)
10/30      ஊணுடை யெச்ச முயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு. (1012)
10/26      நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர். (1016)
10/28      குலஞ்சுடுங் கொள்கை பிழைப்பி னலஞ்சுடு
நாணின்மை நின்றக் கடை. (1019)
10/27      ஆள்வினையு மான்ற வறிவு மெனவிரண்டி
னீள்வினையா னீளுங் குடி . (1022)
10/32      நல்லாண்மை யென்ப தொருவற்குத் தான்பிறந்த
வில்லாண்மை யாக்கிக் கொளல். (1026)
10/29      உழுவா ருலகத்தார்க் காணியஃ தாற்றா
தெழுவாரை யெல்லாம் பொறுத்து. (1032)
10/28      இரவா ரிரப்பார்க்கொன் றீவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர். (1035)
10/26      செல்லான் கிழவ னிருப்பி னிலம்புலந்
தில்லாளி னூடி விடும்.  (1039)
10/30      இரப்பாரை யில்லாயி னீர்ங்கண்மா ஞால
மரப்பாவை சென்றுவந் தற்று. (1058)
10/26      பிணையேர் மடநோக்கு நாணு முடையாட்
கணியெவனோ வேதில தந்து. (1089)
10/30      குறிக்கொண்டு நோக்காமை யல்லா லொருகண்
சிறக்கணித்தாள் போல நகும். (1095)
10/31      நீங்கிற் றெறூஉங் குறுகுங்காற் றண்ணென்னுந்
தீயாண்டுப் பெற்றா ளிவள். (1104)
10/30      அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தா ணுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை. (1115)
10/28      உடம்பொ டுயிரிடை யென்னமற் றன்ன
மடந்தையொ டெம்மிடை நட்பு. (1122)
10/29      கண்ணுள்ளிற் போகா ரிமைப்பிற் பருவரார்
நுண்ணியரெங் காத லவர் . (1126)
10/29      இமைப்பிற் கரப்பாக் கறிவ லனைத்திற்கே
யேதில ரென்னுமிவ் வூர் . (1129)
10/23      நோனா வுடம்பு முயிரு மடலேறு
நாணினை நீக்கி நிறுத்து . (1132)
10/29      நிறையரியர் மன்னளிய ரென்னாது காம
மறையிறந்து மன்று படும் . (1138)
10/28      யாங்கண்ணிற் காண நகுப வறிவில்லார்
யாம்பட்ட தாம்படா வாறு . (1140)
10/28      உறாஅதோ வூரறிந்த கௌவை யதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து. (1143)
10/25      தொடிற்சுடி னல்லது காமநோய் போல
விடிற்சுட லாற்றுமோ தீ. (1159)
10/33      உள்ளம்போன் றுள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோவென் கண். (1170)
10/27      கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழு
மிதுநகத் தக்க துடைத்து. (1173)
10/26      பேணாது பெட்டா ருளர்மன்னோ மற்றவர்க்
காணா தமைவில கண். (1178)
10/35      நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க் குரைக்கோ பிற.  (1181)
10/28      உவக்காணெங் காதலர் செல்வா ரிவக்காணென்
மேனி பசப்பூர் வது. (1185)
10/25      ஒருதலையா னின்னாது காமங்காப் போல
இருதலை யானு மினிது. (1196)
10/28      உள்ளினுந் தீராப் பெருமகிழ் செய்தலாற்
கள்ளினுங் காம மினிது.  (1201)
10/27      மற்றியா னென்னுளேன் மன்னோ வவரொடியா
னுற்றநா ளுள்ள வுளேன். (1206)
10/34      கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்
குயலுண்மை சாற்றுவேன் மன். (1212)
10/27      நனவினா னல்காக் கொடியார் கனவினா
னென்னெம்மைப் பீழிப் பது. (1217)
10/26      தணந்தமை சால வறிவிப்ப போலு
மணந்தநாள் வீங்கிய தோள். (1233)
10/27      முயங்கிய கைகளை யூக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல். (1238)
10/29      கண்ணின் பசப்போ பருவர லெய்தின்றே
யொண்ணுதல் செய்தது கண்டு. (1240)
10/32      காண்கமற் கொண்கனைக் கண்ணாரக் கண்டபி
னீங்குமென் மென்றோட் பசப்பு. (1265)
10/33      கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
பெண்ணிறைந்த நீர்மை பெரிது. (1272)
10/31      செறிதொடி செய்திறந்த கள்ள முறுதுயர்
தீர்க்கு மருந்தொன் றுடைத்து. (1275)
10/31      பெரிதாற்றிப் பெட்பக் கலத்த லரிதாற்றி
யன்பின்மை சூழ்வ துடைத்து. (1276)
10/31      உய்த்த லறிந்து புனல்பாய் பவரேபோற்
பொய்த்த லறிந்தேன் புலந்து. (1287)
10/27      உப்பமைந் தற்றாற் புலவி யதுசிறிது
மிக்கற்றா னீள விடல். (1302)
10/31      நினைத்திருந்து நோக்கினுங் காயு மனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீ ரென்று. (1320)
10/27      இல்லை தவறவர்க் காயினு மூடுதல்
வல்ல தவரளிக்கு மாறு.  (1321)
10/29      தவறில ராயினுந் தாம் வீழ்வார் மென்றோ
ளகறலி னாங்கொன் றுடைத்து. (1325)
10/29      ஊடுதல் காமத்திற் கின்ப மதற்கின்பங்
கூடி முயங்கப் பெறின். (1330)
11/30      வானின் றுலகம் வழங்கி வருதலாற்
றானமிழ்த மென்றுணரற் பாற்று.  (11)
11/28      இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு. (23)
11/25      நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். (28)
11/33      தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்க றானென்றாங்
கைம்புலத்தா றோம்ப றலை. (43)
11/30      ஆற்றி னொழுக்கி யறனிழுக்கா வில்வாழ்க்கை
நோற்பாரி னோன்மை யுடைத்து. (48)
11/30      பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற. (61)
11/30      அன்பிற்கு முண்டோ வடைக்குந்தா ழார்வலர்
புன் கணீர் பூசல் தரும். (71)
11/31      இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந் தின்
றுணைத்துணை வேள்விப் பயன். (87)
11/27      இன்சொ லினிதீன்றல் காண்பா னெவன்கொலோ
வன்சொல் வழங்கு வது. (99)
11/28      செய்யாமற் செய்த வுதவிக்கு வையகமும்
வானகமு மாற்ற லரிது. (101)
11/27      தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்
பாற்பட் டொழுகப் பெறின். (111)
11/28      வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவுந் தமபோற் செயின் (120)
11/35      கதங்காத்துக் கற்றடங்க லாற்றுவான் செவ்வி
யறம்பார்க்கு மாற்றி னுழைந்து . (130)
11/29      ஒழுக்கத்தி னொல்கா ருரவோ ரிழுக்கத்தி
னேதம் படுபாக் கறிந்து . (136)
11/30      ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை யிழுக்கத்தி
னெய்துவ ரெய்தாப் பழி . (137)
11/31      அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல, தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.  (151)
11/31      அஃகாமை செலவத்திற் கியாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள். (178)
11/31      புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாத
லறங்கூறு மாக்கந் தரும். (183)
11/34      ஏதிலார் குற்றம்போற் றங்குற்றங் காண்கிற்பிற்
றீதுண்டோ மன்னு முயிர்க்கு. (190)
11/29      தோன்றிற் புகழொடு தோன்றுக வஃதிலார்
தோன்றலிற் றோன்றாமை நன்று. (236)
11/27      புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
யிகழ்வாரை நோவ தெவன்?.  (237)
11/26      வசையொழிய வாழ்வாரே வாழ்வா ரிசையொழிய
வாழ்வாரே வாழா தவர். (240)
11/30      பொருணீங்கிப் பொச்சாந்தா ரென்ப ரருணீங்கி
யல்லவை செய்தொழுகு வார். (246)
11/35      தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லா
ரவஞ்செய்வா ராசையுட் பட்டு. (266)
11/30      வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்க
ளைந்து மகத்தே நகும்.  (271)
11/28      மழித்தலு நீட்டலும் வேண்டா வுலகம்
பழித்த தொழித்து விடின். (280)
11/32      எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு. (299)
11/25      நகையு முவகையுங் கொல்லுஞ் சினத்திற்
பகையு முளவோ பிற. (304)
11/29      நோயெல்லா நோய்செய்தார் மேலவா நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர். (320)
11/27      நாளென வொன்றுபோற் காட்டி யுயிரீரும்
வாள துணர்வார்ப் பெறின். (334)
11/29      இருணீங்கி யின்பம் பயக்கு மருணீங்கி
மாசறு காட்சி யவர்க்கு. (352)
11/31      ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர் வில்லா தவர்க்கு. (354)
11/25      காமம் வெகுளி மயக்க மிவை மூன்ற
னாமங் கெடக்கெடு நோய். (360)
11/28      வேண்டாமை யன்ன விழுச்செல்வ மீண்டில்லை
யாண்டு மஃதொப்ப தில். (363)
11/32      வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க்குந் துய்த்த லரிது. (377)
11/28      கொடையளி செங்கோல் குடியோம்ப னான்கு
முடையானாம் வேந்தர்க் கொளி. (390)
11/28      உவப்பத் தலைக்கூடி யுள்ளப் பிரித
லனைத்தே புலவர் தொழில் (394)
11/27      யாதானு நாடாமா லூராமா லென்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு. (397)
11/27      கேடில் விழுச்செல்வங் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.  (400)
11/29      இழுக்க லுடையுழி யூற்றுக்கோ லற்றே
யொழுக்க முடையார்வாய்ச் சொல். (415)
11/33      எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு. (424)
11/27      உலகந் தழீஇய தொட்ப மலர்தலுங்
கூம்பலு மில்ல தறிவு. (425)
11/30      உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல். (442)
11/30      சூழ்வார்கண் ணாக வொழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல். (445)
11/27      இடிப்பாரை யில்லாத வேமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும். (448)
11/26      மனத்து ளதுபோலக் காட்டி யொருவற்
கினத்துள தாகு மறிவு. (454)
11/33      தெரிந்த வினத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்
கரும்பொருள் யாதொன்று மில். (462)
11/27      எண்ணித் துணிக கருமந் துணிந்தபி
னெண்ணுவ மென்ப திழுக்கு . (467)
11/31      தொடங்கற்க வெவ்வினையு மெள்ளற்க முற்று
மிடங்கண்ட பின்னல் லது .  (491)
11/28      சிறுபடையான் செல்லிடஞ் சேரி னுறுபடையா
னூக்க மழிந்து விடும் . (498)
11/29      பெருமைக்கு மேனைச் சிறுமைக்குந் தத்தங்
கருமமே கட்டளைக் கல். (505)
11/27      நன்மையுந் தீமையு நாடி நலம்புரிந்த
தன்மையா னாளப் படும் .  (511)
11/26      வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை
யாராய்வான் செய்க வினை . (512)
11/24      நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு. (520)
11/30      பெருங்கொடையான் பேணான் வெகுளி யவனின்
மருங்குடையார் மாநிலத் தில். (526)
11/29      பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கி
னதுநோக்கி வாழ்வார் பலர். (528)
11/26      முறைகோடி மன்னவன் செய்யி னுறைகோடி
யொல்லாது வானம் பெயல். (559)
11/33      அருஞ்செவ்வி யின்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்ன துடைத்து. (565)
11/31      கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்த
னடுமுரண் டேய்க்கு மரம். (567)
11/28      கண்ணோட்ட மென்னுங் கழிபெருங் காரிகை
யுண்மையா னுண்டிவ் வுலகு.  (571)
11/29      கருமஞ் சிதையாமற் கண்ணோட வல்லார்க்
குரிமை யுடைத்திவ் வுலகு. (578)
11/32      வினைசெய்வார் தஞ்சுற்றம் வேண்டாதா ரென்றாங்
கனைவரையு மாராய்வ தொற்று. (584)
11/28      ஒற்றொற்றித் தந்த பொருளையு மற்றுமோ
ரொற்றினா லொற்றிக் கொளல். (588)
11/29      உரமொருவற் குள்ள வெறுக்கையஃ தில்லார்
மரமக்க ளாதலே வேறு. (600)
11/30      மடிமை குடிமைக்கட் டங்கிற்றன் னொன்னார்க்
கடிமை புகுத்தி விடும். (608)
11/28      இடுக்கண் வருங்கா னகுக வதனை
யடுத்தூர்வ தஃதொப்ப தில்.  (621)
11/28      அற்றேமென் றல்லற் படுபவோ பெற்றேமென்
றோம்புத றேற்றா தவர். (626)
11/30      தெரிதலுந் தேர்ந்து செயலு மொருதலையாச்
சொல்லலும் வல்ல தமைச்சு. (634)
11/31      ஆக்கமுங் கேடு மதனால் வருதலாற்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு. (642)
11/30      கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாஞ் சொல். (643)
11/33      வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடன்
மாட்சியின் மாசற்றார் கோள். (646)
11/28      துணைநல மாக்கந் தரூஉம் வினைநலம்
வேண்டிய வெல்லாந் தரும்.  (651)
11/29      ஊறொரா லுற்றபி னொல்காமை யிவ்விரண்டி
னாறென்ப ராய்ந்தவர் கோள். (662)
11/32      எனைத்திட்ப மெய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டா துலகு. (670)
11/33      ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே யொல்லாக்காற்
செல்லும்வாய் நோக்கிச் செயல் (673)
11/28      பொருள்கருவி காலம் வினையிடனொ டைந்து
மிருடீர வெண்ணிச் செயல். (675)
11/33      உறைசிறியா ருண்ணடுங்க லஞ்சிக் குறைபெறிற்
கொள்வர் பெரியார்ப் பணிந்து. (680)
11/27      மன்னர் விழைப விழையாமை மன்னரான்
மன்னிய வாக்குந் தரும். (692)
11/28      வேட்பன சொல்லி வினையில வெஞ்ஞான்றும்
கேட்பினுஞ் சொல்லா விடல். (697)
11/28      நன்றென்ற வற்றுள்ளு நன்றே முதுவருண்
முந்து கிளவாச் செறிவு. (715)
11/32      உணர்வ துடையார்முற் சொல்லல் வளர்வதன்
பாத்தியு ணீர்சொரிந் தற்று. (718)
11/31      வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
றொகையறிந்த தூய்மை யவர்.  (721)
11/29      பகையகத்துப் பேடிகை யொள்வா ளவையகத்
தஞ்சு மவன்கற்ற நூல் (727)
11/29      பெரும்பொருளாற் பெட்டக்க தாகி யருங்கேட்டா
லாற்ற விளைவது நாடு. (732)
11/27      சிறுகாப்பிற் பேரிடத்த தாகி யுறுபகை
யூக்க மழிப்ப தரண். (744)
11/29      முற்றியு முற்றா தெறிந்து மறைப்படுத்தும்
பற்றற் கரிய தரண். (747)
11/30      அடற்றகையு மாற்றலு மில்லெனினுந் தானை
படைத்தகையாற் பாடு பெறும். (768)
11/29      இனைய ரிவரெமக் கின்னம்யா மென்று
புனையினும் புல்லென்னு நட்பு. (790)
11/33      உள்ளற்க வுள்ளஞ் சிறுகுவ கொள்ளற்க
வல்லற்க ணாற்றறுப்பார் நட்பு. (798)
11/29      விழையார் விழையப் படுப பழையார்கட்
பண்பிற் றலைப்பிரியா தார். (810)
11/26      அறிவின்மை யின்மையு ளின்மை பிறிதின்மை
யின்மையா வையா துலகு.   (841)
11/27      அறிவிலா னெஞ்சுவந் தீதல் பிறிதியாது
மில்லை பெறுவான் றவம். (842)
11/29      அன்பில னான்ற துணையிலன் றான்றுவ்வா
னென்பரியு மேதிலான் றுப்பு. (862)
11/34      வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க் கினிது. (865)
11/33      குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்
கினனிலனா மேமாப் புடைத்து. (868)
11/27      வில்லே ருழவர் பகைகொளினுங் கொள்ளற்க
சொல்லே ருழவர் பகை. (872)
11/27      நோவற்க நொந்த தறியார்க்கு மேவற்க
மென்மை பகைவ ரகத்து. (877)
11/29      வாள்போல் பகைவரை யஞ்சற்க வஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு!. (882)
11/29      உறன்முறையானுட்பகை தோன்றி னிறன்முறையா
னேதம் பலவுந் தரும். (885)
11/27      செப்பின் புணர்ச்சிபோற் கூடினுங் கூடாதே
யுட்பகை யுற்ற குடி. (887)
11/32      வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளு மென்னாந்
தகைமாண்ட தக்கார் செறின். (897)
11/32      குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து. (898)
11/27      பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும். (902)
11/33      பொருட் பெண்டிர் பொய்ம்மை முயக்க மிருட்டறையி
லேதில் பிணந்தழீஇ யற்று. (913)
11/31      நிறைநெஞ்ச மில்லவர் தோய்வர் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள். (917)
11/28      வரைவிலா மாணிழையார் மென்றோள் புரையிலாப்
பூரியர்க ளாழு மளறு. (919)
11/30      களித்தறியே னென்பது கைவிடுக நெஞ்சத்
தொளித்ததூஉ மாங்கே மிகும். (928)
11/32      ஒன்றெய்தி நூறிழக்குஞ் சூதர்க்கு முண்டாங்கொ
னன்றெய்தி வாழ்வதோ ராறு.  (932)
11/28      அற்றா லளவறிந் துண்க வஃதுடம்பு
பெற்றா னெடிதுய்க்கு மாறு. (943)
11/30      அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து. (944)
11/32      சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்துமென் பார். (956)
11/29      சிறியா ருணர்ச்சியு ளில்லை பெரியாரைப்
பேணிக்கொள் வேமென்னு நோக்கு. (976)
11/33      இறப்பே புரிந்த தொழிற்று ஆம்-சிறப்பும்தான்
சீர் அல்லவர்கண் படின். (977)
11/27      நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டு முலகு. (994)
11/31      நகல்வல்ல ரல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன் றிருள். (999)
11/29      சூழாமற் றானே முடிவெய்துந் தங்குடியைத்
தாழா துஞற்று பவர்க்கு. (1024)
11/31      அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்து
மாற்றுவார் மேற்றே பொறை. (1027)
11/28      குடிசெய்வார்க் கில்லை பருவ மடிசெய்து
மானங் கருதக் கெடும். (1028)
11/25      சுழன்றுமேர்ப் பின்ன துலக மதனா
லுழங்து முழவே தலை.  (1031)
11/27      தொல்வரவுந் தோலுங் கெடுக்குந் தொகையாக
நல்குர வென்னு நசை. (1043)
11/28      அறஞ்சாரா நல்குர வீன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும். (1047)
11/32      இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ள
முள்ளு ளுவப்ப துடைத்து.  (1057)
11/31      அகப்பட்டி யாவாரைக் காணி னவரின்
மிகப்பட்டுச் செம்மாக்குங் கீழ். (1074)
11/29      அணங்கொ லாய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொன் மாலுமென் னெஞ்சு.  (1081)
11/27      தாம்வீழ்வார் மென்றோட் டுயிலி னினிதுகொ
றாமரைக் கண்ணா னுலகு. (1103)
11/24      வீழு மிருவர்க் கினிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு . (1108)
11/31      மலர்காணின் மையாத்தி நெஞ்சே யிவள்கண்
பலர்காணும் பூவொக்கு மென்று . (1112)
11/28      அனிச்சமு மன்னத்தின் றூவியு மாத
ரடிக்கு நெருஞ்சிப் பழம் . (1120)
11/28      கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழுந்
திருநுதற் கில்லை யிடம் . (1123)
11/27      தொடலைக் குறுந்தொடி தந்தாண் மடலொடு
மாலை யுழக்குந் துயர் . (1135)
11/30      மடலூர்தல் யாமத்து முள்ளுவேன் மன்ற
படலொல்லா பேதைக்கென் கண் . (1136)
11/26      அறிகிலா ரெல்லாரு மென்றேயென் காம
மறுகின் மறுகு மருண்டு . (1139)
11/24      ஊரவர் கௌவை யெருவாக வன்னைசொன்
னீராக நீளுமிந் நோய். (1147)
11/29      செல்லாமை யுண்டே லெனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.  (1151)
11/33      அரிதாற்றி யல்லனோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்னிருந்து வாழ்வார் பலர். (1160)
11/30      இன்பங் கடன்மற்றுக் காம மஃதடுங்காற்
றுன்ப மதனிற் பெரிது. (1166)
11/30      தெரிந்துணரா நோக்கிய வுண்கண் பரிந்துணராப்
பைத லுழப்ப தெவன். (1172)
11/30      அவர்தந்தா ரென்னுந் தகையா லிவர்தந்தென்
மேனிமே லூரும் பசப்பு. (1182)
11/34      புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தே னவ்வளவி
லள்ளிக்கொள் வற்றே பசப்பு. (1187)
11/31      பசப்பெனப் பேர்பெறுத னன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றா ரெனின். (1190)
11/30      தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி.  (1191)
11/28      வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅ ரெனின். (1194)
11/30      எனைத்தொன் றினிதேகாண் காமந்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன் றில். (1202)
11/29      பணைநீங்கிப் பைந்தொடி சோருந் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள். (1234)
11/25      தொடியொடு தோணெகிழ நோவ லவரைக்
கொடிய ரெனக்கூற னொந்து. (1236)
11/28      முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண். (1239)
11/30      செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோ
யுற்றா ரறிவதொன் றன்று. (1255)
11/31      வினைகலந்து வென்றீ கவேந்தன் மனைகலந்து
மாலை யயர்கம் விருந்து. (1268)
11/26      மலரினு மெல்லிது காமஞ் சிலரதன்
செவ்வி தலைப்படு வார். (1289)
11/32      இனியன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று. (1294)
11/28      கோட்டுப்பூச் சூடினுங் காயு மொருந்தியைக்
காட்டிய சூடினீ ரென்று. (1313)
12/32      இருள்சே ரிருவினையுஞ் சேரா விறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. (5)
12/26      அன்பு மறனு முடத்தாயி னில்வாழ்க்கை
புண்பும் பயனு மது. (45)
12/31      எழுபிறப்புந் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின் (62)
12/31      தம்மிற்றம் மக்க ளறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லா மினிது. (68)
12/31      நயனீன்று நன்மை பயக்கும் பயனீன்று
பண்பிற் றலைப்பிரியாச் சொல் (97)
12/29      உதவி வரைத்தன் றுதவி யுதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து. (105)
12/30      யாகாவா ராயினு நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. (127)
12/30      பரிந்தோம்பிக் காக்க வொழுக்கந் தெரிந்தோம்பித்
தேரினு மஃதே துணை . (132)
12/28      ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல் . (139)
12/29      எளிதென வில்லிறப்பா னெய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி. (145)
12/30      பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்
கறனொன்றோ வான்ற வொழுக்கு. (148)
12/30      நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்
குற்றமு மாங்கே தரும்.  (171)
12/29      இறலீனு மெண்ணாது வெஃகின் விறலீனும்
வேண்டாமை யென்னுஞ் செருக்கு. (180)
12/27      அரும்பய னாயு மறிவினார் சொல்லார்
பெரும்பய னில்லாத சொல். (198)
12/30      மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழி
னறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு. (204)
12/27      புத்தே ளுலகத்து மீண்டும் பெறலரிதே
யொப்புரவி னல்ல பிற. (213)
12/30      ஒத்த தறிவா னுயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும். (214)
12/28      மன்னுயி ரோம்பி யருளாள்வாற் கில்லென்ப
தன்னுயி ரஞ்சும் வினை. (244)
12/28      தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பா
னெங்ஙன மாளு மருள்.  (251)
12/31      படைகொண்டார் நெஞ்சம்போ னன்றூக்கா தொன்ற
னுடல்சுவை யுண்டார் மனம். (253)
12/27      கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
யெல்லா வுயிருந் தொழும். (260)
12/29      தவமுந் தவமுடையார்க் காகு மவமதனை
யஃதிலார் மேற்கொள் வது. (262)
12/34      தவமறைந் தல்லவை செய்தல் புதன்மறைந்து
வேட்டுவன் புட்சிமிழ்த் தற்று. (274)
12/29      பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின். (292)
12/30      சினமென்னுஞ் சேர்ந்தாரைக்கொல்லி யினமென்னு
மேமப் புணையைச் சுடும். (306)
12/32      சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.  (311)
12/30      குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே
யுடம்பொ டுயிரிடை நட்பு. (338)
12/28      பற்றி விடாஅ விடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு. (347)
12/31      கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி. (356)
12/29      இன்ப மிடையறா தீண்டு மவாவென்னுந்
துன்பத்துட் டுன்பங் கெடின். (369)
12/25      பேதைப் படுக்கு மிழவூ ழறிவகற்று
மாகலூ ழுற்றக் கடை. (372)
12/26      நுண்மா ணுழைபுல மில்லா னெழினலம்
மண்மாண் புனைபாவை யற்று. (407)
12/23      எவ்வ துறைவ துலக முலகத்தோ
டவ்வ துறைவ தறிவு. (426)
12/31      வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை யெரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும். (435)
12/29      மனநலத்தி னாகு மறுமைமற் றஃது
மினநலத்தி னேமாப் புடைத்து, (459)
12/32      வினைவலியுந் தன்வலியு மாற்றான் வலியுந்
துணைவலியுந் தூக்கிச் செயல்  (471)
12/27      பருவத்தோ டொட்ட வொழுக றிருவினைத்
தீராமை யார்க்குங் கயிறு. (482)
12/29      ஊக்க முடையா னொடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து . (486)
12/28      நெடும்புனலுள் வெல்லு முதலை யடும்புனலி
னீங்கி னதனைப் பிற . (495)
12/32      குடிப்பிறந்து குற்றத்தி னீங்கி வடுப்பரியு
நாணுடையான் கட்டே தெளிவு (502)
12/30      பொச்சாப்புக் கொல்லும் புகழை யறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு. (532)
12/25      வானோக்கி வாழு முலகெல்லா மன்னவன்
கோனோக்கி வாழுங் குடி. (542)
12/26      வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின். (546)
12/31      குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்
வடுவன்று வேந்தன் றொழில். (549)
12/24      வேலொடு நின்றா னிடுவென் றதுபோலுங்
கோலொடு நின்றா னிரவு . (552)
12/29      செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும். (569)
12/27      உடைய ரெனப்படுவ தூக்கமஃ தில்லா
ருடைய துடையரோ மற்று.  (591)
12/27      பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின். (599)
12/28      குடியென்னுங் குன்றா விளக்க மடியென்னு
மாசூர மாய்ந்து கெடும்.  (601)
12/32      இன்பம் விழையான் வினைவிழைவான் றன்கேளிர்
துன்பந் துடைத்தூன்றுந் தூண். (615)
12/27      முயற்சி திருவினை யாக்கு முயற்றின்மை
யின்மை புகுத்தி விடும். (616)
12/27      ஊழையு முப்பக்கங் காண்ப ருலைவின்றித்
தாழா துஞற்று பவர். (620)
12/30      மடுத்த வாயெல்லாம் பகடன்னா னுற்ற
விடுக்க ணிடர்ப்பா டுடைத்து. (624)
12/26      அடுக்கி வரினு மழிவிலா னுற்ற
விடுக்க ணிடுக்கட் படும். (625)
12/27      இன்பம் விழையா னிடும்பை யியல்பென்பான்
றுன்ப முறுத லிலன். (628)
12/29      இன்பத்து ளின்பம் விழையாதான் றுன்பத்துட்
டுன்ப முறுத லிலன். (629)
12/29      முறைப்படச் சூழ்ந்து முடிவிலவே செய்வர்
திறப்பா டிலாஅ தவர். (640)
12/28      திறனறிந்து சொல்லுக சொல்லை யறனும்
பொருளு மதனினூஉங் கில். (644)
12/31      வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்க
ணூறெய்தி யுள்ளப் படும். (665)
12/32      உருவுகண் டெள்ளாமை வேண்டு முருள் பெருந்தேர்க்
கச்சாணி யன்னா ருடைத்து (667)
12/31      அன்பறி வாராய்ந்த சொல்வண்மை தூதுரைப்பார்க்
கின்றி யமையாத மூன்று. (682)
12/29      எப்பொருளு மோரார் தொடராமற் றப்பொருளை
விட்டக்காற் கேட்க மறை. (695)
12/29      பழைய மெனக் கருதிப் பண்பல்ல செய்யுங்
கெழுதகைமை கேடு தரும். (700)
12/29      அடுத்தது காட்டும் பளிங்குபோ னெஞ்சங்
கடுத்தது காட்டு முகம். (706)
12/28      முகநோக்கி நிற்க வமையு மகநோக்கி
யுற்ற துணர்வார்ப் பெறின். (708)
12/34      அவையறியார் சொல்லன்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉ மில். (713)
12/33      புல்லவையுட் பொச்சாந்துஞ் சொல்லற்க நல்லவையு
ணன்கு செலச்சொல்லு வார். (719)
12/30      வாளொடென் வன்கண்ண ரல்லார்க்கு நூலொடெ
னுண்ணவை யஞ்சு பவர்க்கு. (726)
12/28      பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்.  (751)
12/30      ஒண்பொருள் காழ்ப்ப வியற்றியார்க் கெண்பொரு
ளேனை யிரண்டு மொருங்கு. (760)
12/29      உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையு ளெல்லாந் தலை.  (761)
12/28      கூற்றுடன்று மேல்வரினுங் கூடி யெதிர்நிற்கு
மாற்ற லதுவே படை. (765)
12/33      விழித்தகண் வேல்கொண் டெறிய வழித்திமைப்பி
னோட்டன்றோ வன்க ணவர்க்கு. (775)
12/30      நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனிற் கொட்பின்றி
யொல்லும்வா யூன்று நிலை. (789)
12/30      குணனுங் குடிமையுங் குற்றமுங் குன்றா
வினனு மறிந்தியாக்க நட்பு. (793)
12/25      ஊதிய மென்ப தொருவற்குப் பேதையார்
கேண்மை யொரீஇ விடல். (797)
12/31      நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்
குப்பாதல் சான்றோர் கடன். (802)
12/27      ஒல்லுங் கரும முடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்  (818)
12/28      நட்டார்போ னல்லவை சொல்லினு மொட்டார்சொ
லொல்லை யுணரப் படும். (826)
12/31      அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்குஞ் செய்த லரிது. (843)
12/25      அருமறை சோரு மறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு. (847)
12/28      மிகன்மேவன் மெய்ப்பொருள் காணா ரிகன்மேவ
லின்னா வறிவி னவர். (857)
12/27      ஏமுற் றவரினு மேழை தமியனாய்ப்
பல்லார்ப் பகைகொள் பவன். (873)
12/32      பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
றகைமைக்கட் டங்கிற் றுலகு. (874)
12/32      யாண்டுச்சென் றியாண்டு முளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர். (895)
12/34      பயன்றூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயன்றூக்கி நள்ளா விடல். (912)
12/31      உட்கப் படாஅ ரொளியிழப்ப ரெஞ்ஞான்றுங்
கட்காதல் கொண்டொழுகு வார்.  (921)
12/34      உள்ளொற்றி யுள்ளூர் நகப்படுவ ரெஞ்ஞான்றுங்
கள்ளொற்றிக் கண்சாய் பவர். (927)
12/27      சிறுமை பலசெய்து சீரழிக்குஞ் சூதின்
வறுமை தருவதொன் றில். (934)
12/27      மாறுபா டில்லாத வுண்டி மறுத்துண்ணி
னூறுபா டில்லை யுயிர்க்கு, (945)
12/29      இன்மை யொருவற் கிளிவன்று சால்பென்னுந்
திண்மையுண் டாகப் பெறின். (988)
12/33      எண்பதத்தா லெய்த லெளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை யென்னும் வழக்கு.  (991)
12/30      நாணா லுயிரைத் துறப்ப ருயிர்ப்பொருட்டா
னாண்டுறவார் நாணாள் பவர் (1017)
12/29      குற்ற மிலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்று முலகு. (1025)
12/30      உழவினார் கைம்மடங்கி னில்லை விழைவதூம்
விட்டேமென் பார்க்கு நிலை. (1036)
12/32      இற்பிறந்தார் கண்ணேயு மின்மை யிளிவந்த
சொற்பிறக்குஞ் சோர்வு தரும். (1044)
12/31      கரப்பிலார் வையகத் துண்மையாற் கண்ணின்
றிரப்பவர் மேற்கொள் வது. (1055)
12/29      இரப்ப னிரப்பாரை யெல்லா மிரப்பிற்
கரப்பா ரிரவன்மி னென்று. (1067)
12/29      இரவுள்ள வுள்ள முருகுங் கரவுள்ள
வுள்ளதூஉ மின்றிக் கெடும். (1069)
12/30      கண்களவு கொள்ளுஞ் சிறுநோக்கங் காமத்திற்
செம்பாக மன்று பெரிது. (1092)
12/27      உறாஅ தவர்போற் சொலினுஞ் செறாஅர்சொ
லொல்லை யுணரப் படும். (1096)
12/32      செறாஅச் சிறுசொல்லுஞ் செற்றார்போ னோக்கு
முறாஅர்போன் றுற்றார் குறிப்பு. (1097)
12/30      கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனு
மொண்டொடி கண்ணே யுள.  (1101)
12/28      பிணிக்கு மருந்து பிறம னணியிழை
தன்னோய்க்குத் தானே மருந்து. (1102)
12/27      காணிற் குவளை கவிழ்ந்து நிலனோக்கு
மாணிழை கண்ணொவ்வே மென்று . (1114)
12/31      இன்க ணுடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்க ணுடைத்தாற் புணர்வு (1152)
12/30      ஓம்பி னமைந்தார் பிரிவோம்பன் மற்றவர்
நீங்கி னரிதாற் புணர்வு. (1155)
12/28      காதலர் தூதொடு வந்த கனவினுக்
கியாதுசெய் வேன்கொல் விருந்து.  (1211)
12/25      காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிந் நோய். (1227)
12/28      அழல்போலு மாலைக்குத் தூதாகி யாயன்
குழல்போலுங் கொல்லும் படை. (1228)
12/25      பொருண்மாலை யாளரை யுள்ளி மருண்மாலை
மாயுமென் மாயா வுயிர். (1230)
12/26      பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோட் பூச லுரைத்து. (1237)
12/27      கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகொ டேறுமென் னெஞ்சு. (1264)
12/26      வருகமற் கொண்க னொருநாட் பருகுவன்
பைதனோ யெல்லாங் கெட. (1266)
12/33      ஒருநா ளெழுநாள்போற் செல்லுஞ்சேட் சென்றார்
வருநாள்வைத் தேங்கு பவர்க்கு. (1269)
12/30      கரப்பினுங் கையிகந் தொல்லாநின் னுண்க
ணுரைக்க லுறுவதொன் றுண்டு.  (1271)
12/28      தினைத்துணையு மூடாமை வேண்டும் பனைத்துணையுங்
காம நிறைய வரின் . (1282)
12/24      ஊட லுணங்க விடுவாரோ டென்னெஞ்சங்
கூடுவே மென்ப தவா. (1310)
12/30      ஊடி யிருந்தேமாத் தும்மினார் யாந்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து. (1312)
12/30      வழுத்தினா டும்மினே னாக வழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீ ரென்று. (1317)
12/28      ஊடலிற் றோற்றாவர் வென்றா ரதுமன்னுங்
கூடலிற் காணப் படும். (1327)
12/23      ஊடுக மன்னோ வொளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ விரா. (1329)
13/31      விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்
துண்ணின் றுடற்றும் பசி (13)
13/30      விசும்பிற் றுளிவீழி னல்லான்மற் றாங்கே
பசும்புற் றலைகாண் பரிது. (16)
13/24      செயற்பால தோரு மறனே யொருவற்
குயற்பால தோரும் பழி. (40)
13/28      தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யு மழை. (55)
13/26      அன்பீனு மார்வ முடைமை யதுவீனு
நண்பென்னு நாடாச் சிறப்பு. (74)
13/33      விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. (82)
13/31      அகனமர்ந்து செய்யா ளுறையு முகனமர்ந்து
நல்விருந் தோம்புவா னில். (84)
13/32      மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துட் டுப்பாயார் நட்பு. (106)
13/32      சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்தொருபாற்
கோடாமை சான்றோர்க் கணி . (118)
13/28      சொற்கோட்ட மில்லது செப்ப மொருதலையா
வுட்கோட்ட மின்மை பெறின் . (119)
13/27      அடக்க மமரரு ளுய்க்கு மடங்காமை
யாரிரு ளுய்த்து விடும்.  (121)
13/32      பிறன்பொருளாட் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்
தறம்பொருள் கண்டார்க ணில்.  (141)
13/28      பகைபாவ மச்சம் பழியென நான்கு
மிகவாவா மில்லிறப்பான் கண். (146)
13/30      உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லு
மின்னாச்சொ னோற்பாரிற் பின். (160)
13/31      விழுப்பேற்றி னஃதொப்ப தில்லையார் மாட்டு
மழுக்காற்றி னன்மை பெறின். (162)
13/27      அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்
தீயுழி யுய்த்து விடும். (168)
13/32      அறஞ்சொல்லு நெஞ்சத்தா னன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும். (185)
13/27      பல்லார் முனியப் பயனில சொல்லுவா
னெல்லாரு மெள்ளப் படும்.  (191)
13/33      அருட் செல்வஞ் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணு முள.  (241)
13/33      தினற்பொருட்டாற் கொல்லா துலகெனின் யாரும்
விலைப்பொருட்டா லூன்றருவா ரில். (256)
13/30      உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ண துணர்வார்ப் பெறின். (257)
13/33      துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொன்
மற்றை யவர்க டவம். (263)
13/32      பற்றற்றே மேன்பார் படிற்றொழுக்சு மெற்றெற்றென்
றேதம் பலவுங் தரும். (275)
13/31      கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கு மதுவிளிந் தற்று. (332)
13/31      நாச்செற்று விக்குண்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும். (335)
13/30      புக்கி லமைந் தின்று கொல்லோ வுடம்பினுட்
டுச்சி லிருந்த வுயிர்க்கு. (340)
13/32      அடல்வேண்டு மைந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லா மொருங்கு. (343)
13/31      யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த வுலகம் புகும். (346)
13/28      பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கு மற்று
நிலையாமை காணப் படும் (349)
13/31      பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு. (350)
13/31      ஓர்த்துள்ள முள்ள துணரி னொருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு. (357)
13/27      நுண்ணிய நூல்பல கற்பினு மற்றுந்தன்
ணுண்மை யறிவே மிகும். (373)
13/26      பரியினு மாகாவாம் பாலல்ல வுய்த்துச்
சொரியினும் போகா தம. (376)
13/28      துறப்பார்மற் றுப்புர வில்லா ருறற்பால
வூட்டா கழியு மெனின். (378)
13/29      தூங்காமை கல்வி துணிவுடைமை யிம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவற்கு. (383)
13/32      எண்ணென்ப வேனை யெழுத்தென்ப விவ்விரண்டுங்
கண்ணென்ப வாழு முயிர்க்கு. (392)
13/27      கல்லா வொருவன் றகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும். (405)
13/29      செவியுணவிற் கேள்வி யுடையா ரவியுணவி
னான்றாரோ டொப்பர் நிலத்து. (413)
13/25      இவறலு மாண்பிறந்த மானமு மாணா
வுவகையு மேத மிறைக்கு. (432)
13/32      தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார். (433)
13/27      பீலிபெய் சாகாடு மச்சிறு மப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின். (475)
13/26      உளவரை தூக்காத வொப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும். (480)
13/31      பொள்ளென வாங்கே புறம்வேரார் காலம்பார்த்
துள்வேர்ப்ப ரொள்ளி யவர் . (487)
13/34      முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கு மரண்சேர்ந்தா
மாக்கம் பலவுந் தரும் . (492)
13/31      கொலைமேற்கொண் டாரிற் கொடிதே யலைமேற்கொண்
டல்லவை செய்தொழுகும் வேந்து.  (551)
13/29      ஆபயன் குன்று மறுதொழிலோர் நூன்மறப்பர்
காவலன் காவா னெனின். (560)
13/28      ஒற்றொற் றுணராமை யாள்க வுடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும் (589)
13/24      உள்ள முடைமை யுடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும் (592)
13/29      குடியாண்மை யுள்வந்த குற்ற மொருவன்
மடியாண்மை மாற்றக் கெடும். (609)
13/29      கருவியுங் காலமுஞ் செய்கையுஞ் செய்யு
மருவினையு மாண்ட தமைச்சு.  (631)
13/27      மதிநுட்ப நூலோ டுடையார்க் கதிநுட்பம்
யாவுள முன்னிற் பவை. (636)
13/30      சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொ லச்சொல்லை
வெல்லுஞ்சொ லின்மை யறிந்து. (645)
13/24      என்று மொருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை. (652)
13/26      ஓஒதல் வேண்டு மொளிமாழ்குஞ் செய்வினை
யாஅது மென்னு மவர். (653)
13/28      துன்ப முறவரினுஞ் செய்க துணிவாற்றி
யின்பம் பயக்கும் வினை. (669)
13/26      குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
யுறுப்போ ரனையரால் வேறு. (704)
13/33      பகைமையுங் கேண்மையுங் கண்ணுரைக்குங் கண்ணின்
வகைமை யுணர்வார்ப் பெறின். (709)
13/31      பொருளென்னும் பொய்யா விளக்க மிருளறுக்கு
மெண்ணிய தேயத்துச் சென்று. (753)
13/29      அருளென்னு மன்பீன் குழவி பொருளென்னுஞ்
செல்வச் செவிலியா லுண்டு. (757)
13/26      கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும். (774)
13/31      விழுப்புண் படாதநா ளெல்லாம் வழுக்கினுள்
வைக்குந்தன் னாளை யெடுத்து. (776)
13/30      கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை யடுங்காலை
யுள்ளினு முள்ளுஞ் சுடும். (799)
13/28      இனம்போன் றினமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும். (822)
13/33      மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுட் சாப்புல்லற் பாற்று. (829)
13/26      பொய்படு மொன்றோ புனைபூணுங் கையறியாப்
பேதை வினைமேற் கொளின். (836)
13/32      இன்பத்து ளின்பம் பயக்கு மிகலென்னுந்
துன்பத்துட் டுன்பங் கெடின். (854)
13/27      வலியார்க்கு மாறேற்ற லோம்புக வோம்பா
மெலியார்மேன் மேக பகை.  (861)
13/29      பகையென்னும் பண்பி லதனை யொருவ
னகையேயும் வேண்டற்பாற் றன்று  (871)
13/32      வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கட் பட்ட செருக்கு. (878)
13/25      மனமாணா வுட்பகை தோன்றி னினமாணா
வேதம் பலவும் தரும். (884)
13/30      உடம்பா டிலாதவர் வழ்க்கை குடங்கருட்
பாம்போ டுடனுறைந் தற்று. (890)
13/25      பெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாராற்
பேரா விடும்பை தரும். (892)
13/27      பொருட்பொருளார் புன்னலந் தோயா ரருட்பொரு
ளாயு மறிவி னவர். (914)
13/32      தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள். (916)
13/32      இருமனப் பெண்டிருங் கள்ளுங் கவறுந்
திருநீக்கப் பட்டார் தொடர்பு. (920)
13/36      நாணென்னு நல்லாள் புறங்கொடுக்குங் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு. (924)
13/35      வேண்டற்க வென்றிடினுஞ் சூதினை வென்றதூஉந்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று .  (931)
13/33      இழத்தொறூஉங் காதலிக்குஞ் சூதேபோற் றுன்ப
முழத்தொறூஉங் காதற் றுயிர். (940)
13/28      மிகினுங் குறையினு நோய்செய்யு நூலோர்
வளிமுதலா வெண்ணிய முன்று.  (941)
13/30      மயிர்நீப்பின் வாழாக் கவரிமா வன்னா
ருயிர்நீப்பர் மானம் வரின். (969)
13/30      அன்புநா ணொப்புரவு கண்ணோட்டம் வாய்மையொ
டைந்துசால் பூன்றிய தூண். (983)
13/31      நகையுள்ளு மின்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு. (995)
13/25      பொருளானா மெல்லாமென் றீயா திவறு
மருளானா மாணாப் பிறப்பு. (1002)
13/28      நச்சப் படாதவன் செல்வ நடுவூரு
ணச்சு மரம்பழுத் தற்று. (1008)
13/27      கரவா துவந்தீயும் கண்ணன்னார் கண்ணு
மிரவாமை கோடி யுறும்.  (1061)
13/30      இன்மை யிடும்பை யிரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்ட தில். (1063)
13/30      கொடும்புருவங் கோடா மறைப்பி னடுங்கஞர்
செய்யல மன்னிவள் கண். (1086)
13/27      ஒண்ணுதற் கோஒ வுடைந்ததே ஞாட்பினு
ணண்ணாரு முட்குமென் பீடு. (1088)
13/24      வேட்ட பொழுதி னவையவை போலுமே
தோட்டார் கதுப்பினா டோள். (1105)
13/27      காமக் கடும்புன லுய்க்குமே நானொடு
நல்லாண்மை யென்னும் புணை. (1134)
13/30      கண்டது மன்னு மொருநா ளலர்மன்னுந்
திங்களைப் பாம்புகொண் டற்று. (1146)
13/28      நெய்யா லெரிநுதுப்பே மென்றற்றாற் கௌவையாற்
காம நுதுப்பே மெனல். (1148)
13/26      காமமு நாணு முயிர்காவாத் தூங்குமென்
னோனா வுடம்பி னகத்து. (1163)
13/27      காமக் கடன்மன்னு முண்டே யதுநீந்து
மேமப் புணைமன்னு மில். (1164)
13/27      சாயலு நாணு மவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையுந் தந்து. (1183)
13/31      வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வா ரளிக்கு மளி. (1192)
13/24      மாலையோ வல்லை மணந்தா ருயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது.  (1221)
13/28      நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாருங் கண். (1232)
13/26      கொடியார் கொடுமை யுரைக்குந் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள். (1235)
13/27      காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேனிவ் விரண்டு. (1247)
13/29      நிறையுடையே னென்பேன்மன் யானோவென் காம
மறையிறந்து மன்று படும். (1254)
13/28      பன்மாயக் கள்வன் பணிமொழி யன்றோநம்
பெண்மை யுடைக்கும் படை .  (1258)
13/33      புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்ணன்ன கேளிர் வரின். (1267)
13/28      துனியும் புலவியு மில்லாயிற் காமங்
கனியுங் கருக்காயு மற்று. (1306)
13/25      ஊடலிற் றோன்றுஞ் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்.  (1322)
14/28      தம்பொரு ளென்பதம் மக்க ளவர்பொரு
டந்தம் வினையான் வரும். (63)
14/27      ஒருமையு ளாமைபோ லைந்தடக்க லாற்றி
னெழுமையு மேமாப் புடைத்து. (126)
14/26      ஒழுக்க முடைமை குடிமை யிழுக்க
மிழிந்த பிறப்பாய் விடும் . (133)
14/28      நிறையுடைமை நீங்காமை வேண்டிற் பொறையுடைமை
போற்றி யொழுகப் படும். (154)
14/30      ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. (155)
14/30      பிறன்பழி கூறுவான் றன்பழி யுள்ளுந்
திறந்தெரிந்து கூறப் படும். (186)
14/30      அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப்
புன்சொ லுரைப்பான் பொறை. (189)
14/28      எனைப்பகை யுற்றாரு முய்வர் வினைப்பகை
வீயாது பின்சென் றடும். (207)
14/28      கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ வுலகு.  (211)
14/32      ஒப்புரவி னால்வருங் கேடெனி னஃதொருவன்
விற்றுக்கோட் டக்க துடைத்து. (220)
14/31      ஈத்துவக்கு மின்ப மறியார்கொ றாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர். (228)
14/35      அருள்கருதி யன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்க ணில். (285)
14/28      புறந்தூய்மை நீரானமையு மகந்தூய்மை
வாய்மையாற் காணப் படும். (298)
14/28      நெருந லுளனொருவ னின்றில்லை யென்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு.  (336)
14/28      அவாவினை யாற்ற வறுப்பிற் றவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும். (367)
14/32      அவாவில்லார்க் கில்லாகுந் துன்ப மஃதுண்டேற்
றவா அது மேன்மேல் வரும். (368)
14/26      ஆகூழாற் றோன்று மசைவின்மை கைப்பொருள்
போகூழாற் றோன்று மடி.  (371)
14/26      ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். (380)
14/31      முறைசெய்து காப்பாற்று மன்னவன் மக்கட்
கிறையென்று வைக்கப் படும். (388)
14/27      செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கு மீயப் படும். (412)
14/28      செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்க
ளவியினும் வாழினு மென். (420)
14/30      செருக்குஞ் சினமுஞ் சிறுமையு மில்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.  (431)
14/27      வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு. (465)
14/30      கொடுத்தலு மின்சொலு மாற்றி னடுக்கிய
சுற்றத்தாற் சுற்றப் படும் . (525)
14/32      பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை யதுவுலகத்
தெப்பானூ லோர்க்குந் துணிவு . (533)
14/29      இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட
பெயலும் விளையுளுந் தொக்கு. (545)
14/28      கூழுங் குடியு மொருங்கிழக்குங் கோல்கோடிச்
சூழாது செய்யு மரசு . (554)
14/30      சிதைவிடத் தொல்கா ருரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு. (597)
14/26      அருமை யுடைத்தென் றசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.  (611)
14/30      வினைத்திட்பம் மென்ப தொருவன் மனத்திட்ப
மற்றைய வெல்லாம் பிற.  (661)
14/29      நூலாரு ணூல்வல்ல னாகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு. (683)
14/26      இறுதி பயப்பினு மெஞ்சா திறைவற்
குறுதி பயப்பதாந் தூது. (690)
14/28      குறிப்பிற் குறிப்புணரா வாயி னுறுப்பினு
ளென்ன பயத்தவோ கண். (705)
14/32      பொறையொருங்கு மேல்வருங்காற் றாங்கி யிறைவற்
கிறையொருங்கு நேர்வது நாடு. (733)
14/30      பிணியின்மை செல்வம் விளைவின்ப மேம
மணியென்ப நாட்டிற்கிவ் வைந்து. (738)
14/32      குடிப்பிறந்து தன்கட் பழிநாணு வானைக்
கொடுத்துங் கொளல்வேண்டு நட்பு. (794)
14/29      மருவுக மாசற்றார் கேண்மையொன் றீத்து
மொருவுக வொப்பிலார் நட்பு. (800)
14/28      பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்ற லினிது.  (811)
14/32      எனைத்துங் குறுகுத லோம்பன் மனைக்கெழீஇ
மன்றிற் பழிப்பார் தொடர்பு. (820)
14/28      தொழுதகை யுள்ளும் படையொடுங்கு மொன்னா
ரழுதகண் ணீரு மனைத்து. (828)
14/28      ஒருமைச் செயலாற்றும் பேதை யெழுமையுந்
தான்புக் கழுந்து மளறு. (835)
14/29      வெண்மை யெனப்படுவ தியாதெனி னொண்மை
யுடையம்யா மென்னுஞ் செருக்கு. (844)
14/30      கொடுத்துங் கொளல்வேண்டு மன்ற வடுத்திருந்து
மாணாத செய்வான் பகை (867)
14/27      அரம்பொருத பொன்போலத் தேயு முரம்பொரு
துட்பகை யுற்ற குடி. (888)
14/32      எரியாற் சுடப்படினு முய்வுண்டா முய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார். (896)
14/30      அறவினையு மான்ற பொருளும் பிறவினையும்
பெண்ணேவல் செய்வார்க ணில். (909)
14/31      அன்பின் விழைவார் பொருள்விழைவு மாய்தொடியா
ரின்சொல்லிழுக்குத் தரும்.  (911)
14/33      உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்
றப்பானாற் கூற்றே மருந்து. (950)
14/34      வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பிற் றலைப்பிரித லின்று. (955)
14/30      பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டு முயர்வு. (963)
14/31      ஒளியொருவற் குள்ள வெறுக்கை யிளியொருவற்
கஃதிறந்து வாழ்து மெனல்.  (971)
14/25      அற்ற மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும். (980)
14/31      அரம்போலுங் கூர்மைய ரேனு மரம்போல்வர்
மக்கட்பண் பில்லா தவர். (997)
14/29      பிறர்பழியுந் தம்பழியு நாணுவார் நாணுக்
குறைபதி யென்னு முலகு. (1015)
14/28      கருமஞ் செயவொருவன் கைதூவே னென்னும்
பெருமையிற் பீடுடைய தில்.  (1021)
14/30      குடிசெய்வ லென்னு மொருவற்குத் தெய்வ
மடிதற்றுத் தான்முந் துறும். (1023)
14/28      இரப்பான் வெகுளாமை வேண்டு நிரப்பிடும்பை
தானேயுஞ் சாலுங் கரி (1060)
14/26      கூற்றமோ கண்ணோ பிணையோ மடவர
னோக்கமிம் மூன்று முடைத்து. (1085)
14/27      தம்மி லிருந்து தமதுபாத் துண்டற்றா
லம்மா வரிவை முயக்கு. (1107)
14/30      முறிமேனி முத்த முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு. (1113)
14/33      உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியே
னொள்ளமர்க் கண்ணாள் குணம் (1125)
14/30      உவந்துறைவ ருள்ளத்து ளென்று மிகந்துறைவ
ரேதில ரென்னுமிவ் வூர் . (1130)
14/30      கவ்வையாற் கவ்விது காம மதுவின்றேற்
றவ்வென்னுந் தன்மை யிழந்து. (1144)
14/32      களித்தொறுங் கள்ளுண்டல் வேட்டற்றாற் காமம்
வெளிப்படுந் தோறு மினிது. (1145)
14/30      தாம்வேண்டி னல்குவர் காதலர் யாம்வேண்டுங்
கௌவை யெடுக்குமிவ் வூர். (1150)
14/32      நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே யெனைத் தொன்று
மெவ்வநோய் தீர்க்கு மருந்து .   (1241)
14/30      முகைமொக்கு ளுள்ளது நாற்றம்போற் பேதை
நகைமொக்கு ளுள்ளதொன் றுண்டு. (1274)
14/29      பெறாஅமை யஞ்சும் பெறிற்பிரி வஞ்சு
மறாஅ விடும்பைத்தென் நெஞ்சு. (1295)
14/28      ஊடலினுண் டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்றுகொ லென்று. (1307)
14/27      புல்லி விடாஅப் புலவியுட் டோன்றுமென்
னுள்ள முடைக்கும் படை. (1324)
15/34      கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
யெடுப்பதூஉ மெல்லா மழை. (15)
15/29      சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கு மீண்டு. (18)
15/30      சிறப்பீனுஞ் செல்வமு மீனு மறத்தினூஉங்
காக்க மெவனோ வுயிர்க்கு. (31)
15/34      துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கு மிறந்தார்க்கு
மில்வாழ்வா னென்பான் றுணை. (42)
15/30      மோப்பக் குழையு மனிச்ச முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து. (90)
15/31      எழுமை யெழுபிறப்பு முள்ளுவர் தங்கண்
விழுமங் துடைத்தவர் நட்பு (107)
15/31      நன்றிக்கு வித்தாகு நல்லொழுக்கந் தீயொழுக்க
மென்று மிடும்பை தரும் . (138)
15/28      இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை. (153)
15/34      வலியி னிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்றோல் போர்த்துமேய்ந் தற்று. (273)
15/30      பகுத்துண்டு பல்லுயி ரோம்புத னூலோர்
தொகுத்தவற்று ளெல்லாந் தலை. (322)
15/31      கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாண்மேற்
செல்லா துயிருண்ணுங் கூற்று. (326)
15/25      ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப
கோடியு மல்ல பல. (337)
15/30      இயல்பாகு நோன்பிற்கொன் றின்மை யுடைமை
மயலாகு மற்றும் பெயர்த்து. (344)
15/27      பொருளல் லவற்றைப் பொருளென் றுணரு
மருளானா மாணாப் பிறப்பு.  (351)
15/30      எப்பொரு ளெத்தன்மைத் தாயினு மப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு. (355)
15/32      பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்
செம்பொருள் காண்ப தறிவு. (358)
15/26      தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும். (364)
15/22      அஞ்சுவ தோரு மறனே யொருவனை
வஞ்சிப்ப தோரு மவா. (366)
15/34      செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கு முலகு. (389)
15/29      ஒருமைக்கட் டான்கற்ற கல்வி யொருவற்
கெழுமையு மேமாப் புடைத்து. (398)
15/28      சிற்றின மஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.  (451)
15/28      மனந்தூய்மை செய்வினை தூய்மை யிரண்டு
மினந்தூய்மை தூவா வரும். (455)
15/29      அழிவதூஉ மாவதூஉ மாகி வழிபயக்கு
மூதியமுஞ் சூழ்ந்து செயல்.  (461)
15/34      பகல்வெல்லுங் கூகையைக் காக்கை யிகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது .  (481)
15/32      கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த விடத்து . (490)
15/28      விருப்பறாச் சுற்ற மியையி னருப்பறா
வாக்கம் பலவுந் தரும் . (522)
15/28      இழுக்காமை யார்மாட்டு மென்றும் வழுக்காமை
வாயி னதுவொப்ப தில். (536)
15/29      வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயி
னொருவந்த மொல்லைக் கெடும். (563)
15/33      ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை. (579)
15/30      மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியுந் தன்னினு முந்து. (603)
15/31      குடிமடிந்து குற்றம் பெருகு மடிமடிந்து
மாண்ட வுஞற்றி லவர்க்கு. (604)
15/29      பழுதெண்ணு மந்திரியிற் பக்கத்துட் டெவ்வோ
ரெழுபது கோடி யுறும். (639)
15/30      அழக்கொண்ட வெல்லா மழப்போ மிழப்பினும்
பிற்பயக்கு நற்பா லவை. (659)
15/30      முடிவு மிடையூறு முற்றியாங் கெய்தும்
படுபயனும் பார்த்துச் செயல். (676)
15/29      குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல். (696)
15/27      உறுபசியு மோவாப் பிணியுஞ் செறுபகையுஞ்
சேரா தியல்வது நாடு. (734)
15/31      ஆற்று பவர்க்கு மரண்பொரு ளஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்.  (741)
15/28      அருளொடு மன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல். (755)
15/27      உறினட் டறினொரூஉ மொப்பிலார் கேண்மை
பெறினு மிழப்பினு மென். (812)
15/27      கனவினு மின்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு. (819)
15/32      இகலென்ப வெல்லா வுயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்.  (851)
15/30      செறுவார்க்குச் சேணிகவா வின்ப மறிவிலா
வஞ்சும் பகைவர்ப் பெறின். (869)
15/29      மனைவிழைவார் மாண்பய னெய்தார் வினைவிழாவார்
வேண்டாப் பொருளு மது.   (901)
15/28      பெண்ணேவல் செய்தொழுகு மாண்மையி னாணுடைப்
பெண்ணே பெருமை யுடைத்து. (907)
15/33      நலம்வேண்டி னாணுடைமை வேண்டுங் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு.  (960)
15/29      ஒருமை மகளிரே போலப் பெருமையுந்
தன்னைத்தான் கொண்டொழுகி னுண்டு. (974)
15/26      பணியுமா மென்றும் பெருமை சிறுமை
அணியுமாந் தன்னை வியந்து. (978)
15/30      பண்புடையார் பட்டுண் டுலக மதுவின்றேன்
மண்புக்கு மாய்வது மன். (996)
15/31      தொடிப்புழுதி கஃசா வுணக்கிற் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும். (1037)
15/33      நற்பொரு ணன்குணர்ந்து சொல்லினு நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும். (1046)
15/29      நெருப்பினுட் டுஞ்சலு மாகு நிரப்பினுள்
யாதொன்றுங் கண்பா டரிது. (1049)
15/31      கரப்பிடும்பை யில்லாரைக் காணி னிரப்பிடும்பை
யெல்லா மொருங்கு கெடும். (1056)
15/30      அறுவாய் நிறைந்த வவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து . (1117)
15/30      மறைப்பேன்மன் யானிஃதோ நோயை யிறைப்பவர்க்
கூற்றுநீர் போல் மிகும்.  (1161)
15/27      துப்பி னெவனாவர் மற்கொ றுயர்வரவு
நட்பினு ளாற்று பவர். (1165)
15/30      உள்ளுவன் மன்யா னுரைப்ப தவர்திறமாற்
கள்ளம் பிறவோ பசப்பு. (1184)
16/34      உரனென்னுந் தோட்டியா னோரைந்துங் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து. (24)
16/33      பெற்றாற் பெறிற்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழு முலகு. (58)
16/33      புறத்துறுப் பெல்லா மெவன்செய்யும் யாக்கை
யகத்துறுப் பன்பி லவர்க்கு. (79)
16/33      ஒறுத்தார்க் கொருநாளை யின்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ். (156)
16/29      படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர். (172)
16/31      உரைப்பா ருரைப்பவை யெல்லா மிரப்பார்க்கொன்
றீவார்மே னிற்கும் புகழ். (232)
16/33      சுடச்சுடரும் பொன்போ லொளிவிடுந் துன்பஞ்
கடச்சுட நோற்கிற் பவர்க்கு. (267)
16/32      மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க
லுற்றார்க் குடம்பு மிகை. (345)
16/28      வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும். (362)
16/33      எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு. (423)
16/30      பற்றுள்ள மென்னு மிவறன்மை யெற்றுள்ளு
மெண்ணப் படுவதொன் றன்று. (438)
16/31      ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும். (468)
16/32      பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்ல தமைச்சு. (633)
16/32      விடுமாற்றம் வேந்தர்க் குரைப்பான் வடுமாற்றம்
வாய்சோரா வன்க ணவன். (689)
16/28      சிறுமையும் செல்லாத் துணியும் வறுமையு
மில்லாயின் வெல்லும் படை. (769)
16/27      நவிறொறு நூனயம் போலும் பயிறொறும்
பண்புடை யாளர் தொடர்பு. (783)
16/33      பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ யருள்கெடுத்
தல்ல லுழப்பிக்குஞ் சூது. (938)
16/32      பிறப்பொக்கு மெல்லா வுயுர்க்குஞ் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான். (972)
16/24      பெருமை பெருமித மின்மை சிறுமை
பெருமித முர்ந்து விடல். (979)
16/35      அன்புடைமை யான்ற குடிப்பிறத்த லிவ்விரண்டும்
பண்புடைமை யென்னும் வழக்கு. (992)
16/30      நல்குர வென்னு மிடும்பையுட் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும். (1045)
16/26      இன்றும் வருவது கொல்லோ நெருநலுங்
கொன்றது போலு நிரப்பு. (1048)
16/30      துப்புர வில்லார் துவரத் துறவாமை
யுப்பிற்குங் காடிக்குங் கூற்று. (1050)
16/32      உடுப்பதூஉ முண்பதூஉங் காணிற் பிறர்மேல்
வடுக்காண வற்றாகுங் கீழ். (1079)
16/31      இருநோக் கிவளுண்க ணுள்ள தொருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.  (1091)
16/36      விளக்கற்றம் பார்க்கு மிருளேபோற் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு. (1186)
16/27      வீழுநர் வீழப் படுவார்க் கமையுமே
வாழுந மென்னுஞ் செருக்கு. (1193)
16/29      பருவரலும் பைதலுங் காணான்கொல் காம
னொருவர்க ணினறொழுகு வான். (1197)
16/29      நினைப்பவர் போன்று நினையார்கொ றும்மல்
சினைப்பது போன்று கெடும். (1203)
16/30      மறப்பி னெவனாவன் மற்கொன் மறப்பறியே
னுள்ளினு முள்ளஞ் சுடும். (1207)
16/30      ஊடிப் பெருவங் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலிற் றோன்றிய வுப்பு. (1328)
17/33      இருந்தோம்பி யில்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு. (81)
17/30      வித்து மிடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம். (85)
17/31      பரிந்தோம்பிப் பற்றறே மென்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார். (88)
17/27      உடையையு ளின்மை விருந்தோம்ப லோம்பா
மடமை மடவார்க ணுண்டு. (89)
17/27      சிறுமையு ணீங்கிய வின்சொன் மறுமையு
மிம்மையு மின்பந் தரும் (98)
17/28      உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. (339)
17/32      அவாவென்ப வெல்லா வுயிர்க்குமெஞ் ஞான்றுந்
தவாஅப் பிறப்பீனும் வித்து.  (361)
17/35      அன்புடைமை யான்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.  (681)
17/30      தூய்மை துணைமை துணிவுடைமை யிம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு. (688)
17/29      குறிப்பிற் குறிப்புணர் வாரை யுறுப்பினுள்
யாது கொடுத்துங் கொளல். (703)
17/32      முகத்தின் முதுக்குறைந்து துண்டோ வுவப்பினுங்
காயினுங் தான்முந் துறும். (707)
17/28      உறுவது சீர்தூக்கு நட்பும் பெறுவது
கொள்வாருங் கள்வரு நேர். (813)
17/25      உருளாய மோவாது கூறிற் பொருளாயம்
போஒய்ப் புறமே படும். (933)
17/30      ஒழுக்கமும் வாய்மையு நாணுமிம் முன்று
மிழுக்கார் குடிப்பிறந் தார். (952)
17/32      மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த விடத்து. (968)
17/32      கொடுப்பதூஉந் துய்ப்பதூஉ மில்லார்க் கடுக்கிய
கோடியுண் டாயினு மில். (1005)
17/32      இடும்பைக்கே கொள்கலங் கொல்லோ குடும்பத்தைக்
குற்ற மறைப்பா னுடம்பு (1029)
17/31      உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர். (1033)
17/23      இன்மை யெனவொரு பாவி மறுமையு
மிம்மையு மின்றி வரும். (1042)
17/29      இரவென்னு மேமாப்பி றோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும் (1068)
17/34      கரப்பவர்க் கியாங்கொளிக்கும் கொல்லோ விரப்பவர்
சொல்லாடப் போஓ முயிர். (1070)
17/33      சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோற்
கொல்லப், பயன்படும்கீழ். (1078)
17/29      பதிமருண்டு பைத லுழக்கு மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து. (1229)
17/32      மறைப்பேன்மற் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போற் றோன்றி விடும். (1253)
17/27      தும்முச் செறுப்ப வழுதா ணுமருள்ள
லெம்மை மறைத்திரோ வென்று. (1318)
18/33      வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந்
தெய்வத்துள் வைக்கப் படும். (50)
18/28      ஒழுக்கம் விழுப்பந் தரலா னொமுக்க
முயிரினு மோம்பப் படும் .  (131)
18/28      இடும்பைக் கிடும்பை படுப்ப ரிடும்பைக்
கிடும்பை படாஅ தவர். (623)
18/38      குடிப்பிறந்தார் கண்விளங்குங் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போ லுயர்ந்து. (957)
18/34      உறுப்பொத்தன் மக்களொப் பன்றால் வெறுத்தக்க
பண்பொத்த லொப்பதா மொப்பு. (993)
19/30      ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவற் றுணிவு.  (21)
19/34      மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும் . (134)
19/33      இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணு நாட்டிற் குறுப்பு. (737)
19/32      உறுபொருளு முல்கு பொருளுந்தன் னொன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள். (756)
19/31      பனியரும்பிப் பைதல்கொண் மாலை துனியரும்பித்
துன்பம் வளர வரும்.  (1223)
20/32      துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை. (12)
20/35      செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த் திருப்பா
னல்விருந்து வானத் தவர்க்கு. (86)
20/33      துன்புறூஉந் துவ்வாமை யில்லாகும் யார்மாட்டு
மின்புறூஉ மின்சொ லவர்க்கு. (94)
21/32      வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுத லின்று. (83)
21/36      பல்குழுவும் பாழ்செய்யு முட்பகையும் வேந்தலைக்குங்
கொல்குறும்பு மில்லது நாடு. (735)
22/33      கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்ற முடுப்பதூஉ
முண்பதூஉ மின்றிக் கெடும். (166)